சின்னமலர்களே
செல்லமலர்களே
சிரித்து மகிழ்ந்திடும்
சிவந்தமலர்களே
அன்பும் பாசமும் நிறைந்து இருக்கனும்
ஆலைபோலவே தழைத்து வாழனும்
இரக்கம் ஈகையும் நிறைந்து இருக்கனும்
உழைப்பும் ஊக்கமும் தொடர்ந்து இருக்கனும்
எளிமை ஏற்றமும் சகித்து வாழனும்
ஐயமின்றியே துணிந்துவாழனும்
ஒழுக்கம் ஓர்மையும் சிறந்து இருக்கனும்
உங்கள் எண்ணங்கள் உயர்ந்து இருக்கவே
உயர உயரவே முயற்ச்சி செய்யனும்
தாய் தந்தையை மதித்து வாழனும்
தரணி போற்றவே தலை நிமிரனும்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்