நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னவனே!


கனகாமரச் செடியோரம்
கைகோத்து நடக்கையில
கரிச்சாங்குருவி ஒன்னு
கான பாடிச்சி -குருவி
கான பாடிச்சி

கானவ கேட்டுகிட்டே
கதபேசிப் போகையில
கருவேல முல்லு ஒன்னு
நறுக்குன்னு குத்திச்சி -என்காலில்
நறுக்குன்னு குத்திச்சி அத

கண்ட கண்ல கண்ணீர் -என்
கண்ணன் கண்ல வழிய -உன்
கையில எங்கால எடுத்து
வழிஞ்ச ரத்தம் துடைக்க

மனசெல்லாம் மனசெல்லாம்
காத்துல பறந்துச்சி -பஞ்சாகி
காத்துல பறந்துச்சி
குத்தினமுல் வலியெல்லம்
காணாம போயிடுச்சி -காத்துல
காணாம போயிடுச்சி

                      [கருவேலங்காட்டுக்குள்ள]

நெஞ்சுக்குள் வலியெடுத்து
நொடிகூட ஆகவில்ல
துடியா துடிச்சிபோயி
நெஞ்சில சாச்சிக்கிட்ட -உன்
நெஞ்சில சாச்சிக்கிட்ட

விடிய விடிய முழிச்சிருந்து
விழி மூடாம காத்திருந்து
விரலாலே என்ன நீயும்
நீவிகொண்டிருந்த நெஞ்ச
நீவி கொண்டிருந்த -அத

பாத்த என்னோட மனசு
பச்சபுள்ளையா மாறிப்போக -ஒங்கைய
புடிச்சிக்கிட்டே
புலம்பிகொண்டு நானுங்கரைய

மனசெல்லாம் மனசெல்லாம்
பனியா உருகிடிச்சி -வெயில்பட்ட
பனியா உருகிடிச்சி
பட்டாம் பூச்சிபோல
சிறக விறிச்சிச்சி -மனசு
சிறக விறிச்சிச்சி

                       [கருவேலங்காட்டுக்குள்ள]

என்னவனே என்ன வனே
என்னையாளும் மன்னவனே
என் னுயிருக்கு ஏதுமுன்ன
உள்ளம் துடிக்குது ஓங்
உள்ளம் துடிக்குது -அத

நானும் காணும் போது
நெஞ்சம் நெகிழுது என்
நெஞ்சம் நெகிழுது
உங்கூட காலமெல்லாம்

ஒன்னா இருக்கோனும் -சேந்து
ஒன்னாயிருக்கோனும்
உயிருக்குள் ஊடுருவி
உதிரமா ஓடனும் உனக்குள்
உயிரா ஆகனும்..

                         [கருவேலங்காட்டுக்குள்ள]


[டிஸ்கி:: நமக்கும் நாட்டுபுற பாட்டு வருதான்னு ஒரு டெஸ்டுதான்.
 புதுவருசத்துல இதெல்லாம் தேவையான்னு  யாரோ!!!!!!!!! முனங்குவது என்காதில் கேட்கிறது சரி சரி ]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது