நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீப ஒளிபோல் தகதகக்கும் கவிதை.























முதலில்
தீபஒளியில் திழைக்கும் மனங்கள் அத்தனைக்கும்
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தித்திப்போடு வாழ்த்துக்களை வழங்குவதில்
திருப்தியடையும் மனம்..
[மறந்துடாம தித்திப்பு பார்சல் அனுப்பிடுங்கப்பு]

அப்புறம்
என் அன்புமகன் எழுதிய முதல் கவிதை. நேற்று இரவு திடீரென்று மம்மி நான் ஒரு போயம்[poem]] சொல்லவான்னா சொல்லுங்களேன்பார்ப்போம் அப்படின்னே. உடனே இந்த கவிதையை இருவரிகள்சொல்லி முடிக்கும் சமயம் என் கன்னங்களில் கைவைத்து மம்மி ஒரு இதயம்தானே மம்மி இருக்குன்னு அவன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு தலையை சாய்த்து என்முகத்தை நோக்கிய அழகிருக்கே!!!!!!!!! அப்பப்பா அதை சொல்லில் வடிக்க இயலாது.
அத்தனை அன்பா என்மேல் உனக்கு என்றேன்.
பின்னே இருக்காதா என்செல்ல மம்மியாச்சேன்னு கட்டிக்கொண்டே.
[இன்னமும் அந்த சிலிர்ப்பு போகவில்லை]
நிறைய மனசுக்குள்  கவிதை இருக்கு மம்மி  அப்பப்ப சொல்லுவேன் ஓகேவான்னா. ட்ரிப்ள் ஓகே என்றேன்.. .

நாம்பெற்ற பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களும் நம்மை அசரவைக்கிறத்து. அது நடையாகட்டும் உடையாகட்டும் செயலாகட்டும் சிரிப்பாகட்டும். அதுசாதரணமாகவேயிருந்தாலும். ஏதொ நம்குழந்தை சாதித்துவிட்டதைபோன்ற ஓர் உணர்வுகள்தான் நம்மை ஆட்கொள்ளும்.

மரூஃப்பிற்கு ஃபுட்பால் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம். அதேபோல் ஆர்ட் டிலும்,  எதைகாண்கிறானோ அதை வரைந்துவிடுகிறான்.
இளகியமனம், யாரின்முகமும் வாடியதுபோல் தெரிந்தால்,
பாவம்மம்மி அவங்க. என்பதலிருந்து பிறருக்கு உதவுவத்தில் முன் நிற்பதுவரை. நல்லபாசமுள்ளவன் அனைவரின்மேலும்.  வாப்பா [அப்பா] என்றால் அலாதிப்பிரியம்,அவர்களிடம்கிண்டலடித்துக்கொண்டேயிருப்பான்.
என்னிடம் நல்ல ஐஸ்வைப்பான், தப்புப்பண்ணிவிட்டதுபோல் தெரிந்தால்போதும் மம்மி மம்மின்னு வந்து என்கன்னத்தில் கைவைத்து
நான் சிரிக்கிறது நல்லாயிருக்கா அப்படின்னு சொல்லி கன்னத்தைகிள்ளி நல்லா மணக்குது மம்மி அப்படின்னு சொல்லி அப்படியே சிரிப்பான்.

தேவையில்லா எப்பொருளையும்வாங்கமாட்டான்.எதையும்  வேண்டும்தான் எனபிடிவாதம் பிடிக்கமாட்டான்,சூழ்நிலைகள்புரிந்து நடந்துகொள்வான்..ஆகமொத்தத்தில் நல்லபிள்ளை அண்ட். செல்லப்பிள்ளை..

டிஸ்கி//எப்படியிருக்கு செல்லமகனின் முதல் கவிதை.
மகனின் ஒருஎழுத்தானாலும் ஒருவரியானலும்
அது அம்மாவிற்கு கவிதைதான் இல்லையா..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது