ஓடுடைந்து கவிச்சடிக்கும் முட்டையாய்
ஒட்டி உறிஞ்சும் அட்டையாய்
சுயமிழக்க முடியுமோ
சுயநலமது சுயத்தினை போக்குமோ..
சுயமிழக்க
நெருங்கும் தருணம்
சுயம் காக்க முனையுமெந்தன்
சுயநலம்...
சுயம் பேணத்தவறும் -பிறர்
சுயத்திலென்
சுயமிழக்க விரும்பா
சுயநலம்..
தன்நலம் காத்து
பொதுநலம் சிறக்க
என்நலன் தேக்குமென்
சுயநலம்..
சூடு சொரணையற்று
சுடுசொற்கள் பட்டு
மண்புழுவாய் சுருழ
மதிமறுக்குமென் சுயநலம்..
குட்டக் குட்டகுனிந்து- இனியும்
குனிய முடியா நிலையில்
கட்டவிழ்த்து
குட்டுமென் சுயநலம்..
இல்லாமை நெறுக்கி
இன்னலிடும் போது
பொல்லாமை நீக்க
பொசுக்கென பாயுமென் சுயநலம்..
சுயநலக்காரியென
சுட்டிக்காட்டுவதை
சுண்டித்தள்ளுகிறேன்
சுயம் தேடும் பறவையாகாது
சொறியக்கொடுக்கும் மாடாய்
செல்லவிரும்பாததால்...
=============================================
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.