முத்திரைபதிக்க
முன்னுரை,,,,,,
இந்த மூக்குத்தி

காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
இந்தக் கம்மல்

சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீதமாய்
ஸ்வரம் கொடுக்கும்
இந்த சங்கிலி

வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப்பிடித்து
இழுத்துக்கொள்ளும்
இந்த வலையல்

மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
இந்த மோதிரம்

காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
இந்த கால் கொலுசு

பெண்ணரசிகளே
புன்னகையுடன் பொன்நகையும்
சேர்த்திடுங்கள்
புதுமணத்தம்பதிகளாய்
வாழ்ந்து மகிழுங்கள்.......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்