கொடைகளில்பெருங்ககொடை
இறையருளும் திருக்கொடை
இம்மாதத்தில் பிடிப்பது
உண்ணா நோன்பு மட்டுமல்ல
இது உயர்பதவியையும் பெற்றுதரும்
உன்னதமான மாண்பு!
பசியின் நிலையறிய- இழி
இச்சைகள் களைந்தெறிய
வரியவர் நிலை உணர்ந்து
வாரி வழங்கும் குணமறிய!
பதினொரு மாதங்கள் சேர்த்த
பாவங்களை எண்ணி கரைந்தழுக -இனி
பாவக்கறைகள் படியாதிருக்க
படைத்தோனை நினைத்துருக !
காலி வயிறுக்கும்
கடும் நா வறட்சிக்கும்
மனோ இச்சைகளைத் துறந்து
மறையோனை நினைப்பதற்க்கும்!
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து
பாவசெயல்களிலிருந்து விலகியிருப்பவைக்கும்
கிடைத்திடுமே கூலி கூலி நற்கூலி
இறைவன் வழங்கிடும் ஏற்றமிகு கூலி!
கண்ணீர்விட்டு கையேந்தி கேட்டிடு
கருணையாளன் தந்திடுவான்
கண்ணியமிகுந்த
சுவர்கமென்னும் உயர் பதவி
...விருந்தாளியல்ல நோன்பு
உடலுக்கும் உலக்குக்கும் பல
நிலைகளை புரியவைத்து பாடஞ்சொல்லித்தரும்
பெரும் உபகாரி.......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.