நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்புள்ள தமிழ்நாடே...

இரண்டு வருடங்கள் கழித்து
இளைப்பாற வருகிறேன்
இனிப்பாய் இளநீர் தந்து
இன்பமுறச் செய்வாயென

தங்கத்தமிழ்நாடே உனைக்கான
தகதகக்கும் வெயிலை
துடச்சி எரிஞ்சிவிட்டு
தவிப்பாய் ஓடிவருகிறேன்

தாய் தங்கைகண்டு எனைத்
துரத்தி விளையாண்ட
தோழிகளைக் கண்டு
சுகத்தையும் சோகத்தையும்
பகிர்ந்துவிட்டு

மீண்டும்
பாலைவனம் வந்துசேரவேண்டும்
பட்டினியில்லா சோறுதிங்கவும்
பந்தங்கள் பாசமாய் எங்களோடு
ஒட்டி உறவாடவும்

மீண்டும்
ஓடிவரவேண்டும்
ஓயாது உழைக்கும் என்னவனுக்கு
ஒத்தாசையாக இருக்கவேண்டும்

ஆகையால்

அன்புள்ள தமிழ்நாடே-என்னை
ஆசையாய் வரவேற்று
அன்போடு உபசரித்து
இன்முகத்தோடு திரும்ப அனுப்பிவை

ஏனெனில் நான் என்றுமே
என் தாயகத்தின் திருமகளே....
நீரோடையில் நீந்த மீண்டும் 15 நாள் கழித்து வருவேன் அதுவரை மறந்துவிடாதீங்கப்பா நீங்க மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். மீண்டும் வருவேன் எழுத்தாய். வரியாய். கவிதையாய். கவிதைகள் அப்பப்ப வந்துகொண்டிருக்கும். கருத்துக்கள் எழுதாமல் போய்விடாதீர்கள். அனைத்துக்கும் திரும்பியதும் பதில் தருவேன்.
அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறுவது

உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனைநேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது