நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எப்பொழுதெனில்!


மெய்மறப்பது 
எப்பொழுதெனில்?
மெய்யுருகி மனமினைகையில்!

தன்னிலை மறப்பது 
எப்பொழுதெனில்?
தன்னிணையுடன் தஞ்சம் புகுகையில்!

நெஞ்சங்கள் சிலிர்ப்பது 
எப்பொழுதெனில்?
நினைவுகளிலும் சங்கமிக்கையில்!

இரத்த நாளங்கள் குளிர்வது  
எப்பொழுதெனில்?
இணைகள் ஒருவருக்கொருவர் 
ஆறுதலலிக்கையில்!

முழுமனமுடல் மூச்சில் கலப்பது 
எப்பொழுதெனில்?
முதுமையிலும் ஈருடல் 
ஓருயிராய் உருகுகையில்!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது