அம்மாவிற்கே!
கவனமாக கரு சுமந்து
கருவறைக்குள் சுவாசம்தந்து
கண்ணயராது விழித்திருந்து
கரைந்தது தேகம்
குழந்தையைக்காண
வளரும்போது வாசல்பார்த்து
வராதபோது மனம் பதபதைத்து
வறுமையையும் பொறுத்திருந்து
வலிகளையும் ஏற்றது உள்ளம்
குழந்தைக்காக
அழகாய் வளர்த்த பிள்ளை
அடுக்கடுகாய் கொடுத்தது தொல்லை
அன்னையின் மனவேதனை
அறிந்தும் செய்தது சோதனை
அதனால் கிடைத்தது
அன்னைக்கு திண்ணை
அன்றுசுமையிலும் சுகம் கண்டாள்
அன்னை
இன்றுசுகத்திலும் சுமையாய் கருதினான்
இளம்பிள்ளை
அம்மாவிற்கே இந்நிலை
அப்படியானால் -இனி
அவன்
எதிர்காலம் எந்நிலை???
அம்மா.
அன்பின் அஸ்திவாரம்
ஆனந்தத்தின் ஆணிவேர்
இன்பத்தின் நிழற்கொடை
ஈகையின் உதாரணம்
உண்மையின் உறைவிடம்
ஊஞ்சலின் தாலாட்டு
எதார்த்தத்தின் நிதர்சனம்
ஏகன் தந்த ஏஞ்சல் வரம்
ஐம்பூதங்களின் அடக்கம்
ஒற்றைப்பூவில் உலகவாசம்
ஓர் உறவில் ஒட்டுமொத்தநேசம்.
இப்படி
அனைத்திலும் அவளே
அவளில்லையேல் எனக்கேது
நிழல் பூமியிலே!
டிஸ்கி// அம்மாவைப்பற்றி கவிதை எழுதத்தலைப்பு முகநூலில்.[facebook]
அம்மாவே ஒருகவிதை அதை எப்படி வார்த்தையில் எழுதுவது ஆனபோதும்,எழுத்துக்களால் இயன்றவரை.
அனைவரும் அம்மாவை போற்றும்போது அதில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்காகதான் மாற்றுக்கருத்தோடு ஒரு கவிதை.
கண்கூடாக பார்க்கும் விசயங்களை சற்று மனதயக்கத்துடன் எழுத்துக்களால் கவிதையென்ற பெயரில்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.