நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உழைப்பாளருக்கு ஊதியம்!


ஏழை உழைப்பாளார்கள்
உழைத்துகொண்டேதான்
இருக்கிறார்கள்-ஆனால்
ஊதியம் மட்டும்
மிஞ்சுவதேயில்லை!
கூலி கூடுவதுமில்லை!
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்தது உடல்-அதில்
மிஞ்சும் காசுக்கு தேய்ந்த
உடலை தே[ற்ற]த்தக்
கூடமுடிவதில்லை!
உழைப்பாளர்களை
உற்று கவனிக்கும்போது-அவர்கள்
உடலின் ஒவ்வொரு எலும்பிலும்
ஏக்கம் தெரியும்
எத்தனை உழைத்தபோதும் -இந்த
எலும்புகள் மட்டுமே
எஞ்சி மிஞ்சுகிறதேயென!
கடும் உழைப்பாளிகளுக்கு
கஷ்டம் தெரியாதாம்
கஷ்டம் தெரியும்போது
கடும் உழைப்பும்
கஷ்டமாக தெரியாதாம்.

உழைப்பவர்களுக்கு
அவர்கள் வியர்வை
உலர்ந்துவிடுவதற்குள்
அவர்களின்
ஊதியத்தை கொடுத்திடுங்கள்.


தமிழர்களே! தமிழர்களே!
ஏழை உழைப்பாளிகள் –
கஷ்டப்படுவதை காணும்போது
கண்டிப்பாய் உதவுங்கள்.


வாழ்த்துக்கள் சொல்வதோடு
நின்றுவிடாமல் –அவர்கள்
வாழவும் வழிவகுத்துக் கொடுத்திடவும்
வரிசையில் வந்து நில்லுங்கள்..

டிஸ்கி// நேற்று போடவேண்டிய கவிதை.உழைத்து உழைத்து எங்களுக்காக வாழும் மச்சானுக்கும் ஓய்வு வேண்டுமே! அதான்
கொஞ்சம் ஓய்வெடுக்க [துபையைவிட்டு அவுட்]வெளியில் சென்று விட்டோம்! எப்புடி ஓய்வுகிடைக்கும் காரை யார் ஓட்டுவது!  உழைக்கும் மனிதருக்கு ஓய்வென்பதேது!
மன நிம்மதியிருந்தால் அது ஒன்றே போதும். 
எல்லாம் நன்மைக்கே! // இக்கவிதை தமிழ்குடும்பத்திற்காக எழுதியது../

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது