நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உலக மக்களுக்கு எச்சரிக்கை!


அன்பு உள்ளங்களே! உலகில் பலயிடங்களில் சுனாமி சுழற்றிக்கொண்டிருக்கிறது அதே வேளை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுனாமி மற்றும் நிலநடுக்க எச்சரிக்கை விடப்படுள்ளது.


எல்லாம் வல்ல இறைவனிடம் பாதுகாப்புத்தேடுங்கள்.இருகரமேந்தி இறைஞ்சி கேளுங்கள். எவ்வித பயங்கரங்களும். எவ்வித சேதமும். எவ்வித அகோரங்களும் நடந்துவிடாதவாறு இருக்கவும். வரும் சுனாமி எவ்விதத்திலும் மனித வர்கங்களையும் மனிதயினத்துக்கு தேவையானவற்றைகளையும் வதைசெய்துவிடாமல் சென்றிடவும் பிராத்தனை செய்யுங்கள்.

உலகில் பலயிடங்களில் பலவாறாக அக்கிரமங்களும் அட்டுழியங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. மனிதனுக்கு படைத்தவனின்மேல் உள்ள பயம் அற்றுபோய் படைப்பினங்களின் பின்னேயே போய்க்கொண்டு அதன் கவர்ச்சியில் ஆட்க்கொண்டுவிட்டதால் ஆங்காகே ஆட்டம் காணுகிறது பூமியும் பூமியை சுற்றியிருக்கும் கடலும்.  

யா அல்லாஹ் எங்களின் குற்றங்குறைகளை மன்னிதருள்வாயாக!
யா அல்லாஹ் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!
யா அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னித்து
வரவிருக்கும் ஆபத்துகளிருந்தும் பாதுகாத்தருள்வாயாக!

தற்போதைய செய்தி
-----------------------------------
நகுவீர் :சுமத்ரா தீவிற்கருகில் மையப்பகுதியில் உணரப்பட்ட 8.9 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் என்பது சற்று ஆபத்தான கட்டமே இன்னும் ஒரு மணி நேரம் காலக்கெடு கொடுக்கப்பட்டிருப்பதால் நாங்கள் [களஞ்சியம் சுனாமி எச்சரிக்கை மற்றும் சமுதாய வானொலி ] கடலோர மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கி வருகிறோம்!

கார்த்திக் : ஆனால் இணையத்தில் விகடன் மூலம் அறியப்பட்ட தகவல் என்னவென்றால் கடல்சார் தகவல் மையம் சுனாமி எச்சரிக்கையை திறும்பப்பெற்றதாக தெரிவிக்கின்றதே?

நகுவீர் : அது பற்றி கருத்து இல்லை ஆனால் 8.9 ரிக்டர் என்பது ஆபத்தான கட்டமே! நாங்கள் கடற்கரையோரம் அமைந்துல்ல எங்கள் வானொலி நிலையத்தில் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தோம், ஆகையால் தயவு செய்து அஜாக்கிரதையாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும்

கார்த்திக் : கண்டிப்பாக செய்துவிடுகிறேன்

நகுவீர் : கடந்த முறை சுமத்ராவில் ஏற்பட்ட அதிர்வைப்போலவே இம்முறை மையப்பகுதில் கீழ்ப்பகுதியில்ல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
இங்குள்ள மீனவர்கள் கூட கொஞ்சம் பொருட்படுத்தாமலே இருக்கிறார்கள் நாங்கள் கடற்கரைப்பகுதியை விட்டு அப்புறப்படுத்த வலியுறித்தியே வருகிறோம்!

**************************************************************
மீனவர்களோ கடற்கரையோரவாசிகளோ இணையம் பாவிக்கக்கூடிய சூல்நிலையில் இருப்பார்களா எனத் தெரியது ஆனாலும் இயற்கை சீற்றத்தில் அறியாமையால் அழிந்த மக்கள் உதாசீணத்தால் அழியக்காரணமாகிடக்கூடாது முடிந்த வரை உங்களுக்கு தெரிந்த நபர்களை உஷார் நிலைப்படுத்துங்கள்...

இன்னும் சில மணி நேரம் கழித்து என்ன ஆகும் என எண்ணிக்கொண்டிருப்பதை விட செயல் மிக முக்கியம்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது