நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எரியும் மனசு...




எரியும் மனசு...
-------------------------

அணைந்துபோன பெருங் கங்குகளில் 
புகைந்து கொண்டிருக்கும் சிறு நெருப்பாய்
எரியும் மனசோடு சிறு விவாதம்..

பெண்மைகளின் கூடாரம்
போராட்டக் களத்தால் நிரப்பட்டவை!
போராட்டக் காரர்களால் சூழப்பட்டவை!
போராளிகளை உருவாக்குபவை!

பெண் கருவென தெரிந்ததும்
கருவில் கொலை, கள்ளிப்பால் கொலை
கழுத்து நெறித்துக் கொலை செய்வ[த]தும் கூட  
கருணைக்கொலையில் சேர்க்கப்பட்டதோ!

கருவைவிட்டு வெளியேறிய நொடிமுதல்
காணும் கேட்குமிடமெங்கிலும், காட்டுப்பூவென
கசக்கப்பட்டும், கற்பழிக்கப்பட்டும்
காவுகொள்ள[ல்ல]ப்படுவதும் கவனமற்றுக் கிடக்கிறதே?

அக்கினிப் பரிட்சைகளாம்  ஆங்காங்கே
அ யோக்கியர்களால்!
சீதையாயிவளென 
சிதை மூட்டி வதைகூட்டும் சித்ரவதையால்
தினம் எரியும் உணர்வோடும்...

பாசம் வைத்த பாவத்திற்கு பரிசாய்
பத்தினியற்றவளென்ற சாபமும்,,,
பாஞ்சாலியென நினைத்து படையெடுக்கும்
பாவக்காரர்களின் கோரமும் அன்றாடம் பார்த்து
தினம் எரியும் மனசோடும்...

நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந் நிலைதொடரும் அவலங்கள் நடந்தேறுகையில்
அணையாது எரிகிறதே- எரிமலை கு[பி]ளம்பாய் 
அகம்புறமெங்கும் ப[சு]ற்றியே!..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது