நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாவம்!

இச்சையின்பத்தின்
இறுதி அத்தியாத்தில்
எழுதப்பட்டதே
இம்மனித வாழ்வின்
முதல் அத்தியாயம்

கலவிக் கூடலில்
கழிவின் எச்சலில்
உருவானபோதும்
படைப்பினங்களின் சிறந்தவனாக 
கவுரவப்படுத்தப்பட்டும்
மனிதயினத்தின்
செயலத்தனைத்தும்
முன்னுக்கு பின்னே
முரண்கொண்டபடியே!

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
மனிதயினம்
படைத்தவனே அறிவான்
படைப்பினங்களின்
உள்ரங்க அந்தரங்கம்

தான் செய்வது நீதி
பிறர்செய்வது சதியென்றே
பறையடித்து திரிகிறது
படைப்பினங்கள்
பாவம்! 
பாவப்பட்டவர்கள் 
தாம் தான்னென்று
அறிந்தும் அறியாமலே!
பாவக்கறைகளை நீக்க
வழிதெரிந்தும் தெரியாமலே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது