நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மெல்ல வெளியேறிய மெளனங்கள். 2

 
மெல்ல வெளியேறும் மெளனங்கள்.
தொடர்கிறது
 -------------------------------------
திருமணமென்ற சடங்குகளால் என்னை
வேறொருத்தியின் பக்கம்
திரும்பிப்பார்க்க வைத்துவிடலாமென்ற நப்பாசையில்
பெண்பார்க்கும் படலங்கள் தொடர்ந்து
பேதையொருத்தியின் வாழ்வை சிதைக்க
போட்டாப் போட்டிகள் நடைபோடுகின்றது

தண்ணீரில் வாழும் மீன்களின்
கண்ணீரை எவரும் அறிவாறில்லை!
எந்நிலையில் நானிருந்தாலும்
என்னையறிவாரும் எவருமில்லை
என்னையே புரிந்துகொள்ளாத மனிதர்கள்
எனதுணர்வையா! உணர்ந்துக் கொள்ளப்போகிறார்கள்!

அறிவார்களோ! என்னையும் என்மனதையும்
அதனுள்ளே ஆணிவேராய் நீயிருப்பதையும்
அதில் ஆலோலம் பாடி என்னை தாலாட்டுவதையும்
அசையும் பொருள்களோடு நானும் அசைகிறேன்
இசையும் லயத்தோடு நானும் இசைகிறேன்
எல்லாம் உன் நினைவுகளின் உரசல்களால்தானென்று!

உடல் மட்டும் என்னுடன் இருக்கிறது
உயிரை உன்னிடம் அனுப்பிவிட்டுஇது
உலக்குப் புரிகறதோ இல்லையோ
உனக்குப் புரியாதென்றே நினைக்கிறேன்
”ஏனெனில்”
உனக்கே அறியாமல் 
உன்னைத் தொடர்ந்தவனல்லவா!
உனதுயிருடன் ஒட்டி உறவாடுடியவனல்லவா!!

என்னிலிருந்து உன்னை பிரித்துவிட்டதாய்
எண்ணிக்கொண்டு -என்னை
ஏமாற்றியதாய் நினைத்துக்கொண்டது என் வாழ்க்கை
அதற்கெங்கே புரியப்போகிறது
அதனையே ஏமாற்றி உனக்காகவே
உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேனென்று!

உரக்கபேசுகிறார்கள் எனக்கு நீயில்லையென
உண்மையறியாமல் எனதுள்ளம்பற்றி ஒன்றும் புரியாமல்!
உடல் தொட்டு உயிர் வாழும்
காதலை நான் ஒருபோதும் யாசிக்கவில்லை
உயிர்தொட்டு மெய்வாழும்
காதலைத்தான் உள்ளன்போடு நேசிக்கிறேனென்று!

முதுமையாகி நீ கிழவியானபோதும்
முன்வைத்தை அதே அன்பை
உன்மீது நான் வைத்திருப்பேன் நாளும்
இளமைக்கு இரையாகும் கள்ளத்தனங்களை
நேசிக்கவில்லை ஒருபோதும்
இளையோடும் உனதெண்ணச் நினைவுகளை-என்
இறுதிநாள்வரை சுமக்க விரும்புகிறேன் எந்நாளும்

விதி செய்த சூழ்ச்சிசியிலே உன்னை
வேறொருவர் சொந்தமாக கண்டபோதும்
வேண்டுமடி நீயெனக்கு என்ற சொல் என்னிடமேது
வேண்டவில்லை நீ வேண்டும் என ஒருபோதும்
வேண்டுமென வேண்டுகிறேன் உன் நினைவுகளை மட்டும்
எனக்குள் தேக்கிக்கொள்ள அதே மனக்கூடு!

விதியை மதியால் 
வெல்லத்தெரியவில்லை எனக்கும்
விரும்பிய உன்னை மறக்கச்சொல்ல! 
உரிமையில்லை எவருக்கும்
விரும்பியபடியே வாழ்க்கை 
அமைந்திடாது யாருக்கும்!
 
அப்படியே விரும்பியது கிடைத்தாலும்! நிலைப்பது 
அரிதாகிவிடுகிறது சிலருக்கும்
இதுநாள்வரை! கண்ணியமாய் 
உன்னை விரும்பியது எனதுள்ளம்
இறுதிமூச்சுவரை! கண்ணியத்தோடே 
காதல் கொள்ளும் எனது உயிரும்!....

முற்றும்,,, அல்ல தொடரும். கவிதையல்ல வாழ்க்கை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது