நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆணே அஸ்திவாரம்..


ஆண்....
அவனைக்கண்டு அச்சமேற்படின்
பெண்ணுக்கு அவன்
ஆடையல்ல
ஆகாத வாடை...

ஆணே! நீ....

மெழுகு
உருகி
ஒளிதருவதில்,,,

உளி
குடும்பச் சிற்பம்
செதுக்குவதில்....

உருகும் மெழுகுக்கு....
தேயும் நிலவுக்கு....
தாங்கும் தூணுக்கு....
குடும்பம் காக்கும் அரணுக்கு...
அஸ்திவாரமாகும் அன்புக்கு...
அரவணைக்கும் ஆணுக்கு,,,
ஆத்மார்த்த வாழ்த்துகள்...

"அன்புடன் மலிக்கா"
இறைவனை நேசி
இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது