
வானத்தின் நிலப்பரப்பில்
பலவண்ண நிறங்களை நிரப்பி
வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்று வந்தது -இளம்
விதவைக்குக்கோபம்
சட்டென்று பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள்
சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே
பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்
ஆனால் என்னைப்பார்!
பலவண்ண நிறத்தையும்
துறந்து
பால்வண்ண வெள்ளையை
அணிந்து
மனதில் சோகங்களை
சுமந்து
பட்டுப்போனபூவாய்
பரிதவித்து நிற்கிறேன்
என்று...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்