இது நினைவிருக்கிறதா? என்ற பின்னோக்கும் நியாபகங்களுக்காக முகநூலில் எழுதியது..
அட கண்டங்கள் தாண்டியும் அடி எடுத்துவைத்துவிட்டோமா! நம்பவேமுடியவில்லை..
எனது கவிதை பிரிவின் துயர் கனடாவில் வெளியாகும் தங்கத்தீபம் வாரப்பத்திரிக்கையில் 26-05-11அன்று வெளிவந்துள்ளது
ரொம்ப சந்தோஷம். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
//மலிக்கா, உங்களின் கவிதை ஒன்று கனடாவில் வெளிவரும் தங்கத்தீபம் வாரப் பத்திரிகையில் போட்டுள்ளேன். உங்களின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும். நன்றி. சிவா..//
இது சிவா அவர்கள் எனக்கு அனுப்பிய மெயிலிருந்து ..
முகமறியா மனிதர்களின் பாசங்கள் பிரம்மிக்கவைக்கிறது. இப்படி பல பாசங்கள் கிடைக்க எனக்கருளிய இறைவனுக்குதான் நன்றியை தெரிவிக்கவேண்டும்.
எனது கிறுக்களையும் கவிதையாய் ஏற்று அதை வெளியிட்ட தங்கதீபம் பத்திரிக்கைக்கும். அதை வெளியிடக்காரணமாக இருந்த சகோதரர் திரு சிவா அவர்களுக்கும் என நெஞ்சார்ந்த நன்றிகள்...
நன்றி நன்றி நன்றி
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.