நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சருகாகும் மனது!



பருவகாலத்தில்
பச்சிலையான காதல்

போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!

காதலின் காத்திருப்பில்

கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!

குருத்தில் ஆரம்பித்து

சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து

ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை

மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
 
இக்கவிதை தமிழ்த்தோட்டத்தில்  “சருகுகள்” கவிதைப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த கவிதை

காற்றுடன்!
கூடலோடு சேர்ந்த ஊடல்

சட சடக்கிறது சருகு!
----------------

இது ”சருகு” கான ஹைக்கூ போட்டியில் மூன்றாமிடம்..

மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது