நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வா! வாழ்க்கையை வலையாக்கலாம்!


வாழ்க்கைக் கடலில்
எதிர்கொள்ளும் பிரச்சனைகளெல்லாம்
எதிர்த்திடும் சில மன அலைகள்
எதிர்த்திட முடியாமல்
தவித்திடும் பல நிலைகள்

எண்ண அலைகளில் சிக்கி
எண்ணிலடங்கா நினைவுகள்
நீராடுகின்றன -சில சமயம்
நீச்சல் தெரிந்தும்
தெரியாமலும் போராடுகின்றன!

நீராடுவது நீராடட்டும்!
போராடுவது போராடட்டும்!

அலைகளோடு அலையாடவும்
கரைதொட்டு கூத்தாடவும்
சிலவேளை
ஆர்ப்பரித்து அடங்கிகிடக்கவும்
அடங்கிடமுடியாமல் பொங்கியெழவும்
கற்றுக்கொள்ளப் பழகிவிட்டால்

வாழ்க்கை கடலில்
வகைவகை அலைகளால் நாம்
வதைபடும்போதும் வேதனைப்படும்போதும்
வருத்தப்படாது  வா
வாழ்ந்ததிட துணியலாம்!

வலைக்குள் சிக்காத அலையென்னும்போதும்
வாழ்வையே வலையாக்கி
வளைத்திடத் துணியலாம்
அலைகடல் வாழ்க்கையை
அனுபவித்து வாழலாம்...

இக்கவிதை தமிழ்த்தேர் மாதஇதழில் மிக்கநன்றி வானலை வளர்தமிழ்.

நன்றிக்குறிப்பு/
மீண்டும் வலைச்சர அறிமுகம் மட்டற்ற சந்தோஷம்.
என்னை வலைச்சரத்தில்அறிமுகப்படுத்திய சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது