அடக்குமுறைசெய்த
அன்னிய ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் வெற்றிவாகை சூடி
உப்புசத்தியாகிரங்களால் தன்
உடல்களை வருத்தி
தன் குருதிகளையும் தன் தேகங்களையும்
தன் தாய்நாட்டிற்க்காக அர்ப்பனம் செய்து
தாயகத்திற்க்கு பெருமைத்தேடித் தந்து
தன் வம்சா வழியினர்கள் வசந்தமாய் வாழ
தன் வாழ்நாட்க்களைக்கூட வலியுடன் கழித்து
தன்நாட்டுக்காகவே பாடுபட்டு
சுதந்திரக்காற்றை நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம் தூக்கியெறிந்த
தியாகச் செம்மல்களின்
தியாகங்களுக்கு பலன்கிடைத்த தினம்
நம்தாய்நாட்டினை அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாட்டுபட்டவர்களை இன்றுமட்டும்
நினைப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை
எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தந்தர்களோ
அதை கண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது நம்கடமை
சுதந்திரகாற்றை சுகமாய் அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு வாங்கித் தந்த
சுதந்திரத்தை பத்திரப்படுத்தி வாழ்வோமாக
நாட்டை நினைக்கும்போதெல்லாம்
நாட்டுக்காக போராடிய
நல்லவர்களையும்
நினையுகூறுவோமாக.
என் தாய்திருநாட்டில் வாழும் கோடானகோடி
மக்களுக்கும் உலகம்முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும் “என் அன்பான குடியரசு தின வாழ்த்துக்கள்”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.