நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆண்மகனே!


வாழ்வென்னும் வசந்தத்தை நீ
வசப்படுத்திக்கொள்ள வாழ்விடமே
வர"தட்சணை" கேட்ப்பது வேதனையாய் இருக்கிறது

சுகமாய் வாழவருபவள்
உன்சோகங்களையும் உன்சுமைகளையும்
உன்வம்சத்தின் வலிகளையும் சுமப்பதற்கு
கன்னியாய் வருபவள் கைகூலி தரவேண்டுமா?

கெளரவத்திற்காக திருமணமா?
கொடுக்கல் வாங்களில்தான்
இருமனங்கள் இணையனுமா?

அற்புதமான வாழ்க்கைக்கு வரதட்சணைவேண்டுமா?
ஆனந்தமகிழ்ச்சிக்கு ஆண்மகனைஅடகுவைக்கவேண்டுமா?
இதயங்களை இணைப்பதற்கு
இலவச இணைப்புகள் தரவேண்டுமா?

ஆண்மகன் என்பவன் அன்பிலும்அனைத்திலும்
பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கப்பிறந்தவன்
அடுத்தவரிடம் கையேந்தி வாங்கப்பிறந்தவனல்ல!

   ஆணினமே நீ!!

நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை
அதுவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை
அன்போடு கொடுத்து மங்கையை மனைவியாக்கு
மனநிறைவோடு வாழ்க்கையை சிறப்பாக்கு......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது