நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நம்பிக்கை [பிறந்தநாள் வாழ்த்துக்கள்]

1999-பிப்ரவரி-7. சனிக்கிழமை காலை 10 மணி. ராஜம் ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்றது அந்த அம்பாஸிட்டர் கார். அதிலிருந்து தன் தாய், பெரியம்மா, நாத்தனார், தன் சகோதரி இவர்களால் கைத்தாங்களாக இறக்கப்பட்டாள் மலர். முகம்முழுக்க வியர்வை வழிந்தோட கண்கள் குளமாகி நீரை தாரை தாரையாக வடித்துக்கொண்டிருக்க உதட்டை பற்களால் கடித்து வலியையை விழுங்கினாள்.

ஆனாலும் வலிபொருக்கமுடியவில்லை அம்மா அம்மா என்று முனங்கியபடி ஆஸ்பத்தியின் உள்ளே அழைத்துவரப்பட்டாள்.
டாக்டர் ரூமிற்கு அழைத்துசென்று செக்கப்செய்து உடனே பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்டாள். அங்கு குல்கோஸ் பாட்டில்போட்டு கிடக்கவைக்கப்பட்டாள், வலி மேலும் அதிகரிக்க மலர் வாய்விட்டு அழுதாள். யாரும் ரூமிற்குள்அனுமதிக்கப்படவில்லை, சிறிது நேரத்தில் வலி நின்றுவிட

”வலியில்லையா?என நர்ஸ்கேட்டாள்”

”லேசாக வலிப்பதுபோல் தெரிகிறது ஆனால் முன்புபோலில்லை”
என்றாள் மலர்.
மீண்டும் குல்கோஸ் போடப்பட்டது, இடையிடையே மலரின் தாயும், நாத்தனாரும் அடிக்கடி உள்ளே வந்து பார்த்துசென்றார்கள்,இப்படியாக வலி வருவதும், விடுவதுமாக சனிக்கிழமைசெல்ல.

                                                                     [இன்று]
பிப்ரவரி 7- ஞாயிறு காலையும் போய் மதியம் 3 மணியானது. பிரசவ ரூமின் வெளியே ஒரே சப்தம், நேற்றிலிருந்து வலியால் துடிக்கிறாள் இன்னமும் ஒன்று சொல்லாமல் இருக்கீங்களே டாக்டர் சுகப்பிரசவம் ஆகவில்லையென்றால் இப்பவே ஆப்ரேஷன் செய்துடுங்க இதற்குமேல் அவள் வலிபொருக்கமாட்டாள் என மலரின் நாத்தனார் சொல்ல,
மலரின் தாயாரும் கண்ணீருடன் ஒன்றுமேசொல்லமுடியாமல் திணற.

டாக்டர் ராஜம், இருங்க இன்னும்கொஞ்சம் பொறுப்போம். இல்லையென்றால் இன்று ஆப்ரேஷன் செய்துவிடலாம் சிறுவயது வேறு முதல்குழந்தைக்கு பிறகு 8, 9.வருடம் கழித்து பிரசவிப்பதென்பது சாதாரணமா? வேதனை கூடுதலாகத்தானிருக்கும்,என சொல்லிக்கொண்டே பிரசவ அறையினுள் வந்தார் டாக்டர்.

”என்னடிமா சின்னவளே” ஏன் இப்படி வதைகிறாயாம் குழந்தையை வெளியில்விட மனசு வரலையா” எனக்கேட்டுக்கொண்டே வயிற்றை அழுத்திப்பார்த்து


“இத்தனை பாட்டில் குல்கோஸ் ஏற்றியும்  தலையிறங்கவேயில்லையேடி , என்னசெய்ய 5.மணிக்கு ஆப்ரேஷன் செய்துவிடலாம். வெளியே இருப்பவர்கள் என்னிடம் சண்டைபோடுகிறார்கள். என்று சொல்லிக்கொண்டே நர்ஸ்களிடம் ஆப்ரேஷனுக்குண்டான வேலைகளை தயார் படுதச்சொல்லிவிட்டு கிளம்பினார்.

மலருக்கோ மனதிற்குள் பயம், அச்சம், ஆனாலும் தன்பிள்ளை சுகமாக பிறந்திடும் என்றநம்பிக்கை ஆழமாகயிருந்தது.
நேரம் 4,10 நெருக்கிங்கொண்டிருந்தபோது அனைத்தும் முடித்து ஆப்ரேஷனுக்கு மலரை தயாராக்கி
தியேட்டருக்கு கொண்டுபோக ரெடியாக இருக்கும் சமயம் டாக்டர் உள்ளேவர மலருக்கு சற்றுவலியெடுத்தது இருந்தாலும் கூடுதலாக வலியில்லை.

இது உம்ராவுக்கு [மக்காவில்] சென்றபோது
”டாக்டர் மெல்ல அழைத்தாள் மலர்”

என்னம்மா [ராஜம் மலரின் குடும்படாக்டர்தான்]

”ஆயுதம் போட்டாவது குழந்தையை எடுத்துவிடுங்கள் ஆப்ரேஷன் வேண்டாம் என்றாள்”
உடனே டாக்டர், ”மலர் ஆயுதம்போடவும் தலையிறங்கினால்தாம்மா எடுக்கமுடியும்”

                              [ இந்த டிராயிங் அண்ட் பெயிண்டிங் வரைந்து பரிசுவாங்கினார்]
”இல்லைடாக்டர் தலையிறங்கும். என் இறைவன் எப்போதும் எனக்குதாங்கும் அளவுக்குதான் சோதனைதருவான் இது எனக்கு சுகப்பிரசவம்தான். சுகமாக பிறக்கும் என் இறைவனுக்காக நான் விரதம் இருப்பேன்” எனச்சொல்லியபடியே
என் இறைவா உனக்காக நான் நோன்புவைக்கிறேன் எனக்கும் என்குழந்தைக்கும் எவ்வித கஷ்டமுமில்லாமல் சுகமாக்கித்தா என அழுதபடியே வேண்டிக்கொண்டே
”ஒரு 10 நிமிடம் இங்கேயிருக்கேன் பின்புவேண்டுமென்றால் ஆப்ரேஷன் தியேட்டருக்குபோகலாம் என்றாள் மலர்” இறைவனின்மேல் அழுத்தமான நம்பிக்கைவைத்து.

                                   [ இது 5 வயதில் முதல் நோன்பு வைத்தது]
இவ்வளவு அழுத்தமாக சொன்ன மலரைபார்த்த டாக்டர்,
”சரி இன்னொருமுறை செக்கப் பண்றேன் சரியா” எனச்சொல்லி செக்கப் செய்தார் உடனே டாகடரின்முகம் மலர்ந்து.
“சீக்கிரம் சீக்கிரம் நர்ஸ் இங்கவாங்க எனசெல்லி ரூம்பிற்கு தாள்போட்டு வேகமாக பிரசவ வேலையைதொடங்க சிறிது நேரப்போராட்டத்திற்குப் பிறகு
 மதியம் 4.45, க்கு குழந்தை பிறந்தது.

எந்தமயக்க மருந்தும் இல்லாமல் தன்கண்முன்னே பிறந்த குழந்தையைகண்டதும், இரண்டுநாள் வலியில்துடித்த வேதனையெல்லாம் பஞ்சாய் பறந்தது.
வெளியே என்ன இன்னமும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டுபோக வரவில்லையேயென அனைவரும் நிற்க, கதவை திறந்து டாக்டர் குழந்தை பிறந்தாச்சி ஆண்குழந்தை எனச்சொல்ல அனைவருக்கும்
ஆனந்தமும் ஆச்சர்யமும்.

                                                                       [இன்று]

குழந்தையைகண்ட சிறிதுநேரத்தில் உடம்பு அயர்ச்சிதர மயங்கினாள் மலர்,
கண்விழித்தபோது வேறு வார்டிற்கு மாற்றப்பட்டிருந்தாள். குழந்தை பிஞ்சுக்காலை உதைத்து கண்களைமூடிக்கொண்டே சிரித்தது.
5 நாள் கழித்து வெள்ளிகிழமை மாலை 2 ,மணிக்கு கதவை தட்டிவிட்டு டாக்டர் உள்ளேவந்து ”எப்படியிருக்கே நினைத்ததை முடிச்ச வெற்றி முகத்தில் தெரியுதே என்றார்” புன்சிரிப்பு சிரித்தாள் மலர்.

மலரின் முதல்குழந்தையிடம்
”உனக்கு தம்பி வந்துட்டான் உங்கம்மாதான் என்னை ஏமற்றிவிட்டாள்”
ஆப்ரேஷன் செய்திருந்தால் 20,000 வாங்கிருப்பேன் இப்போ 3000. மட்டும்தான் தருவாள். ஆனாலும் கடவுள்மேல் இவளுக்கு அபார நம்பிக்கை. கடவுளும் இவள் வேண்டிக்கேட்டதும் கொடுத்துட்டாரே என சொல்லி மகிழ்ந்தார்.

                                                       [ மதீனத்துல் ஜுமேரா[துபை]
சொன்னதோடல்லாமல்
டாக்டருக்காக கொடுத்த பணத்தில் 200,ரூ முதல்குழந்தையின் கையில்கொடுத்து இது உனக்கு தம்பிபொறந்ததற்காக நான்தரும் கிஃப்ட் என்று சொல்லிக்கொடுத்தார்.
ஆனந்தமும் நிம்மதியும் கைகோர்த்து மகிழ அன்றுமாலையே வீடுவந்து சேர்ந்தார்கள் இறைவனுக்கு நன்றி சொல்லியபடி....

[இன்று என் அன்புமகன் முகமது மஃரூப் அவர்களின் பிறந்தநாள் ]

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

                                                   இஷாந்த்[டெல்லி]   மரூஃப்

வருடங்கள் பல
தவமிருந்து
வேண்டிக்கேட்டு
வசந்தமாய்
வரமாய்
வந்தமகன்

இறைவன் தந்த
பொக்கிஷம்
இதோ இன்று
இரு ஐந்தைக்
கடந்து நிற்கும்
இனிமையான
தங்க ரதம்

இவ் வுலகில்
எனக்குக்
கிடைத்த
இரண்டாவது
மணி மகுடம்

அன்னை தந்தை
சொல் கேட்டு
அனுசரித்து
போகும் பழக்கம்
அக்கா என்றால்
அலாதிப் பிரியம்

என் முகம்
வாடக்கண்டால்
முன்நெற்றித்
தொட்டுப்பார்க்கும்
தாய்மை குணம்

பிறருக்குதவும்
அன்பு மனம்
நான்
பெற்றெடுத்த
அன்பு மகன்

நற்கல்வி
நாலும் பெற்று
நலமுடன்
ஆண்டுகள் பல
வாழந்திடனும்
செல்ல மகன்

நல்வழியில்
நேர்வழியில்
வளமாய் நலமாய்
மனம் நிறைய
உயர்ந்திடனும்
செல்வ மகன்

இறையருள்
நிறைந்துப்பெற்று
ஈருலகிலும்
சிறப்புப்பெற்று
உயர்ந்து சிறந்து
விளங்கிடவே

என்றும்
வாழ்த்திடுமே
இந்த
அன்னை மனம்..


அண்ணன் மகன் ஹரீக்[சிங்கப்பூர்] மஃரூப்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது