கோவை: கின்னஸ் சாதனைக்காக, 1001 கவிஞர்கள் பங்கேற்கும், 72 மணி நேர தொடர் கவியரங்கம். கோவை தமிழ்ச்சங்கம், கற்பகம் பல்கலைக்கழகம்,கோவை அரிமா சங்கம் ஆகியவை தமிழ்க் கவிதையை வளர்க்கும் நோக்கத்தோடு கின்னஸ் சாதனை கவியரங்கம் நடத்தியதல்லவா அதற்காக இரு கவிதைகள் அனுப்பிருந்தேன், [என்கவிதை ”தமிழ்குடில்” குரூப்பால வாசிக்கபட்டதாம்] அதில் ஒன்றுதான் இக்கவிதை.
வீட்டுக்கு தூரம்
ஒன்று சகோ செய்தலி கொடுத்த அன்பு விருதும். மற்றொன்று. கணேஷாண்ணா. மற்றும் செய்தலி தொடர்ந்து என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதும்தான். இரு சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
வீட்டுக்கு தூரம்
கழிவறைக்கும் கையில் இரும்பு
கால்மாட்டில் துடைப்பம்
தலைமாட்டில் உலக்கை
தனி பாத்திரம், தனித்த படுக்கை
தனிமைச்சிறை.
”இன்னும் ”
எதைத் செய்தாலும் குற்றம்- மாதத்தில்
ஏழு [மூன்று] நாள் மட்டும்!
தண்ணீர் ஊற்றாதே!
பூக்கள் கருகிவிடும்.
ஊறுகாயை தொடாதே!
ஊசிப்போய்விடும்.
தீபம் ஏற்றாத்தே!
தெய்வ குற்றம் ஆகிவிடும்.
தனியே செல்லாதே
பேய்கள் பிடித்துவிடும்!
இதென்ன கொடுமை
இயற்கை உபாதைக்கு
இவளுக்கு எதுக்கு தண்டனை ?
மாத விலக்கால்
மடி தரும் வலி -அதோடிந்த
மனித விலக்கால்
மனம் நிறைந்த வலி
தீண்டாமை தொடங்குமிடம் எதுவோ?
தீட்டென்னெச் சொல்லி
தள்ளி வைக்கப்படும்
தன் வீட்டில்தானோ!..
----------------------------------------
400 த்தாண்டி 402 வது எனது பதிவில் சந்தோஷப்படவேண்டிய இருவிசயங்கள்.ஒன்று சகோ செய்தலி கொடுத்த அன்பு விருதும். மற்றொன்று. கணேஷாண்ணா. மற்றும் செய்தலி தொடர்ந்து என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதும்தான். இரு சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.