நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காரணத்தைத்தேடி..

ரைபுரண்டு ஓடும் எண்ணங்களையெல்லாம்
கடல் நீரில் கரைத்தபடி
கால்கடுக்க காத்திருப்பதின்
காரணங்கள் புரியவில்லை

ன்புகொண்ட
ஆன்மாவின் மனமுடுக்குகள்
அழுது புலம்புவதின்
அர்த்தங்கள் விளங்கவில்லை

நினைவுகளை சுமத்திச்சென்ற
நீ வருவாயென
நீரில் உலவியபடி
நெடுநேரம் காத்திருந்தபொழுது



ட்டிப்பார்த்த நிலவிடம்
ஏதேனும் தூதுசெய்தியுள்ளதாயென
ஏக்கத்தோடு கேட்டுப் புலம்பும்
புலம்பல்கள் புரியவில்லை

இப்படி
அர்த்தங்கள் புரியாத
அடுக்கடுக்கான
கேள்விகளுக்கு பதிலில்லாது

சைந்தாடும் கடலலையோடு
அசையாத கால்களிரண்டும்
அடிமனதில் நினைவுகளைமட்டும்
அசைபோட்டபடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது