தென்றல் தாலாட்டி-
என்
தலைகோதிட
கண்மூடினேன்
வீசிய காற்றோடு
வம்பளந்தேன்
வாசனைப்பூவோடு
விளையாடினேன்
நீர்வீழ்ச்சியோடு
கோபித்துக்கொண்டேன்
நீர்முகி கப்பலுக்குள்
போராடினேன்
அதிகாலைப்பொழுதில்
மூச்சுமுட்டியதாய்
உணர்ந்து
அயர்ந்தெழும் வேளையில்
தலைகுப்பற
நான்
தலையணையின்
மடியில்…
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!