மலரினம் நீயடி என்கிறான்
மாலையிலேயே மடிவது அறியாமலா?
வானவில் நீதானடி என்கிறான்
வந்து சிலநொடியில் மறைவது புரியாமலா?
நிலவினம் நீயடி என்கிறான்
காற்றற்று கிடப்பது தெரியாமலா?
ஓவிய தேவதை நீதானடி என்கிறான்
உணர்வற்று இருப்பது விளங்காமலா?
அத்தனையும் உன்னினம் என்கிறான்
அட பெண்ணினம் மென்மையினமென்கிறான்
அத்தனை ஏமாற்றுமா?
ஆணினம்!
அல்லது ஏமாற்றத்தில் இன்பம் காணுமா?
பெண்ணினம்!
காதல் செய்யும் பொழுதிலே
காதல் வார்த்தைகள் மெய்திடுமோ !
தொலைதூர கானல் நீராய் தெரிவதுபோல்
கல்யாணமனதும் பொய்திடுமோ!
புரிந்துணரதா மனங்களுக்கு
கானலும் காதலும் ஒன்றாகிடுமோ!
புரியாத புதிராகி இருவரின்
திருமண வாழ்க்கையும் திண்டாடிடுமோ!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.