விழிகள் துயில்கொள்ளும்நேரம்
வான்[நிலா]விளக்கு துயிலெழும்பி
இருளுறக்கத்தைக் களைத்து
விளையாட அழைக்க
ஆர்ப்பரிக்கும் அலைகடல்
அலைகளற்று அமைதியாயிருந்தபடி
ஆசுவாசப்படுத்திக்கொண்டே
நுரைத்து நுரைத்து கரையைத் தடவ
நிலவும் இருளும்
கலந்தன
கடலும் நிலவும்
மிதந்தன
தூங்காமல் தவிக்கும் உணர்வுகளோ
தூந்துக் கிடக்கும் மனக்கிடங்கை
தூர்வாரியிறைக்கச்சொல்லி
தவித்தன…
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் .