நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிழலைத் தேடும் நிஜங்கள்..

நளினவேடந்தரித்து
நடக்கும் அத்தனையும்
நிஜமென்று நம்பி
நடக்கும் மனமே!

நிழல்கூட நம்கூடவரும்போது
நிஜமாகிறது
நிழலாய் நடப்பதை
நிஜங்களென நினைக்கவைத்து

நிழலை நிஜமென நினைத்து
நிஜத்தை இழந்துவிடும் நெஞ்சமே!
நிஜங்கள்கூட நிஜங்களல்ல
நிலையற்ற இவ்வுலகில்

நிஜமான நட்பு
நீங்கும் பிரிவாக
கண்காணும்போதே
கானல் நீராகி

நிஜமான காதல்
நிழலென்ற கருப்பாக
நினைவிருக்கும்போதே
நீங்கிய வெறுமையாகி

நிஜமான பாசம்
நிலையற்ற நேசமாக
நிலையில்லா உலகைப்போல்
நிலை தடுமாறி

நிஜமான அத்தனையும்
நிழலாகிப் போகிறது
நிலையற்ற அத்தனையும்
நிஜமாக ஆகிறது

நிழலும் நிஜமும்
நிலையற்றுவிட்டதால்
நிலையான ஒன்றைதேடி
நிதமும் அலையும் மனம்

நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
நிழலுக்கு அலைகிறதே!
நிலையற்ற மனம்....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது