பூத்துக்குலுங்கும்
பிறக்கும்
புத்தாண்டே!!
புத்தம் புதிதாய்
புவிமீது விழும்
நிழலாய்
கரும்புச் சாராய்
கற்க்கண்டு
துகளாய்
மண்ணின் மணமாய்
மாசற்ற
மனமாய்
தேனின் ருசியாய்
தென்றலில்
இசையாய்
மழலையின் சிரிப்பாய்
மனங்களின்
பூரிப்பாய்
வேறுபாடுகளை கழைந்து
வெவ்வேறு
இனமென்பதை மறந்து
மனிதமென்னும்
புனிதமாய்
மனிதர்களென்னும்
எங்களை
மனமொத்து மகிழ்வாய்
வளமான வாழ்வை
வாழ்வதற்கு வழிசெய்ய
வல்ல இறைவனிடம்
வேண்டி வா
வரவேற்கிறோம்
புத்தாண்டே
வசந்தமாய் வா வா...
