நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு

  3. நாள் ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து இன்று சற்று தேர்ச்சிபெற்றதும் இதோ உங்கள் முன் வந்து மாநாட்டிற்க்கு அழைப்பு விடுக்கிறேன்..

முத்துப்பேட்டையில் [அட நம்ம ஊர்லதானுங்க] வரும் 12-5-2012 சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை முத்துப்பேட்டை ரஹ்மத் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்புரையாற்ற நாடறிந்த பெண் கல்வியாளர்கள். சிறந்த சொற்பொழிவாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் . அதுசரி அதில் உனக்கென்ன வேலை என்கிறீகளா? அதுவா பெரிய பெரிய அறிவாளிங்க பேசப்போகிற மாநாட்டை இந்த பச்சப்புள்ளதானுங்க தொகுத்து வழங்கப்போகிறது. உள்ளுக்குள்  உதறல் இருந்தாலும் இறைவன்மேல் பாரத்தைபோட்டுவிட்டு துணிந்து சரியென்று சொல்லிட்டேன்.எல்லாம் நல்லபடியாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வான் என்ற நம்பிக்கையோடு..

 உங்கள் அனைவரின் அன்போடு நீரோடையில் வலம் வருகின்ற நான். தற்போது இப்படியும் வலம் வரத்தொடங்கியிருக்கிறேன். இதற்க்கு தாங்கள் அனைவரின் பிராத்தனைகளும் வேண்டும்.  அதனோடு தாங்கள் அனைவரையும் மிக மிக அன்போடு இந்த மாநாட்டுக்கு அழைக்கிறேன்.

அன்று நடைபெறும் இம்மாநாட்டினை  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில்  இணையதளத்திலும் நேரடி ஒளிப்பரப்பை காணலாம்..

அனைவரின் வருகையையும்  எதிர்பார்த்திருக்கும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது