நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதல் துதி..

கிளிக் கிளிக்

என்னை தொலைத்தேன் உன்னுள்
உன்னைப் புதைத்தேன் என்னுள்

மூச்சை சுவாசித்தேன் உன்னுள்
அதை அடைகாத்தேன் என்னுள்

நிறைவைக் கண்டேன் உன்னுள்
அதை நிரப்பிக்கொண்டேன் என்னுள்

உணர்வுகள் கண்டேன் உனக்குள்
அதை உடுத்திக்கொண்டேன் எனக்குள்

எனையே உருக வைத்தாய் எனக்குள்
நான் உருமாறி புகுந்தேன் உனக்குள்

என்ன செய்தாய் என்னை
ஏன் நித்தமும் நினைக்கிறேன் உன்னை

அன்பு கொண்டாயோ என்மேல்
அதை அருந்திவிட்டேனோ நீர்போல்

துடிக்கிறது உனக்காக நெஞ்சம்
துதிபாடி அழைகிறேன் புகுந்துவிடு
எனக்குள் தஞ்சம்..

இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது