நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காவியத்திலகதிற்கொரு கவிதை


பனிமலையில்
பூபாளம்
கேட்டீர் –அதை

பன்னீர்
புஷ்பங்களாய்
பகிர்ந்தளித்தீர்

பல
காவியங்களைத்
தொகுத்தீர்

பத்தாயிரம்
கவிதைகளுக்கு
மேல்
வடித்தீர்

கல்லாதோர்க்கும்
கவியெழுத
கற்றுக்
கொடுத்தீர்

காவியத்
திலகமென்று
பெயரெடுத்தீர்

முத்
தமிழையும்
மூச்சில்
கொண்டீர்

முதிர்ச்சியிலும்
இளமை
கண்டீர்

பன்னாட்டு
இஸ்லாமிய
இலக்கிய
கழகம்
தந்தீர்

பசுமை
கொஞ்சும்
இனிமையாய்
பல மனங்களில்
நிறைந்தீர்

பிறரை
பாராட்டும்
பண்புகள்
கொண்டீர்

பிறர்
மதிக்கும்
மனிதராய்
உயர்ந்தீர்

வெண்பாக்கள்
கவிதைகள்
புனைந்தீர்-அதில்

வெற்றி
வரிகளையும்
விதைத்தீர்

வரிகளுக்கும்
விளக்கம்
கொடுத்தீர்

வைர
வரிகளையும்
கற்றுக்
கொடுத்தீர்

அற்புதக்
கவியெழுதும்
காவியமே!

அன்பு
மனங்கொண்ட
மனிதநேயமே!

ஆசிகள்
அள்ளித்
தந்திடுங்கள்

ஆண்டவனின்
அருளோடு
வாழ்ந்திடுங்கள்...

இக்கவிதை. இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தலைவர்.
அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நிறுவனர். காவியத்திலகம். திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
அவர்களுக்காக நான் எழுதிய சிறு கவிதை.

வளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.

இன்று துபையிலிருந்து தன்தாயகம் செல்லும் அவர்களுக்கு
இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக!

இக்கவிதையை பார்த்தும்  தற்போது மெயிலில் பதிலளித்திருந்தார்கள்
இதோ அது

மகளே!

கவிதை படித்தேன்
களிப்புற்றேன்.

நன்றியொடு
வாழ்த்துக்கள்
நவின்றேன்.

இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்

மீண்டும் சந்திப்போம்.

--வாப்பா--

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது