
மனசென்பது ஓர் மர்மக்கோட்டை
மந்திரமின்றி செய்திடும் பலபல சேட்டை
மதில்மேல் பூனையாகி- பிற
மனிதர்களையும் ஆடிடும் வேட்டை!
ஓரா யிரமென்ன ஓர் லட்சமென்ன
ஓடும் எண்ணங்களையெல்லாம்
ஒரு நிலைபடுத்திக்கொள்ளயியன்ற
ஓர் உன்னத மனப்பை-அது
வண்ண வண்ண கனவுகளில் மிதக்கும்
வரையரையற்று எல்லை மீறியும் நடக்கும்
வறுமைக்கும் பொறாமைக்கும் அஞ்சும்
வலிகளையும் வேதனைகளையும் தாங்கும்!
வஞ்சங்களையும் வாஞ்சைகளையும் தேக்கும்
வகுத்த பாதையிலும் வழிதவறாது பயணம் செய்யும்
சந்தேகங்களையும் சந்தோஷங்களையும் சுமக்கும்
சாதனைகளையும் சோதனைகளையும் வெல்ல நினைக்கும்!
சொல்லத் துடிக்கும் மனசு-அதனை
சொல்லத் தெரியாமல் துடிக்கும்
சொல்லில்லாது பேசிச் சிரிக்கும்-பலநேரம்
சொல்லில்லாது பேசிச் சிரிக்கும்-பலநேரம்
சொக்கவைத்து சிக்கலாக்கும்
பாதையில்லாது வெகுதூரம் நடக்கும்
சிறகில்லாது வானிலும் பறக்கும்
உருவமேயில்லாது வெகுலாவகமாய் நடிக்கும்-மனசு
உணர்வுகளால் மட்டுமே துடிக்கும்
மனசென்ற மாய மந்திரம்
மர்மங்களை உள்ளடக்கிய அபூர்வம்
மனமுடுக்கெங்கும் மகாசமுத்திரம்-அது
மனிதயினத்துக்கு கிடைத்ததோ
மாபெரும் வரம்...........இக்கவிதை அமீரகத்தில் வலம் வரும் தமிழ்தேர் மாதஇதழில் வெளியான கவிதை.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.