நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பிரிவின் துயர்!

  

டிவயிற்றில் 
அமிலம் சுரக்கும் உணர்வு!
நெஞ்சுப் பகுதிக்குள்
நிலநடுக்கம் வந்த அதிர்வு!
 தொண்டைகுழியில்
துளிநீரின்றி துவழும் தவிப்பு!

லைகள்     
கிளைகளைவிட்டு உதிர்வதுபோல்
இதயத்தை விட்டு 
ஏதோ நழுவதுபோன்றொரு துடிப்பு!

 டந்தவைகள் அனைத்தும்
 நினைவுகளாகி துயர் தருதே
 இதுதான் பிரிவின் வலியா!
 இதயமது 
இல்லாதது போலாகுதே!
இதுதான் பிரிவின் துயரா!
   
 பூக்களின் வாசத்தை 
நுகரும் நெஞ்சம்
 சிறு முள்குத்தலில் துடிப்பதுபோல்  
பாசத்தின் பிடிப்பை
 பற்றிக்கொள்ளும் மனம்
சிறு பிரிவில்கூட துடிக்கிறதே! 
     
வாழ்க்கையில் பல பிரிவு 
சில பிரிவு சிலாகிக்கிறது
சில பிரிவு சிக்கலாக்கிறது
சில பிரிவு சிந்திக்க வைக்கிறது
 சில பிரிவு கண்ணீர் சிந்த வைக்கிறது

பிரிவுகளின் பட்டில் 
பல வகையிருந்தாலும்                                       
அதன் வலிகளின் ரணங்கள்
ஆழ்மனதை
காயப்படுத்தாமல் இருப்பதேயில்லை!

தனால்தான் என்னவோ                                    
எந்நிலையிலும் எப்பிரிவையும்
எந்த உள்ளமும்                                       
ஏற்க விரும்புவதேயில்லை!...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது