நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கதைகேளு கதகேளு கிரேண்மாவின் கதகேளு![தொடரோ தொடர்]


இந்தபதிவ எழுத அழைத்த அக்பருக்கும் பல்சுவை நிஜாமுதீன் அண்ணாவுக்கும் மிக்க நன்றி,

என்ன கத சொல்லுறதுன்னு யோசிச்சப்ப மண்டையில எதுவுமே தோனல.
இப்புடி தோன்றும் அங்கே ஏதாவது இருந்தாத்தானேன்னு. நம்ம ஹுசைன்னமா கேக்குறதுபோல தெரியுது.
இருந்தாலும் புதுசா ஒரு கத சொல்லுறேன் கேளுங்க
படிச்சிட்டு இது புதுசான்னு கேட்டவங்களுக்கு.
மங்குனி அமைச்சரிடம் சொல்லி மங்குனி சீடி அனுப்பிவைக்கப்படும்..


ஒரு ஊர்ல கிரேண்மா கிரேண்மா ஒரு பாட்டி இருந்தாங்களாம்
[அச்சோ கிரேண்மான்னாலே பாட்டிதானே சும்மா இடையில் கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது ஓகே.]


அவங்க எப்போது வடைசுடுவாங்களாம்[ஜலீக்கா விதவித சுடுவது போலவல்ல] வடை சுட்டு போரடிச்சிபோச்சின்னு அன்னிக்கி ரெஸ்ட் எடுத்தாங்களாம், அப்போ அங்கே வந்த வெள்ள காக்காவுக்கு அதர்ச்சியா போச்சாம் அச்சோ இந்த கிரேண்மா இன்னக்கி வடை சுடலையேன்னு.


பசிதாங்காமுடியாத வெள்ளக்காக்கா  எப்படியும் இன்னிக்கி ஓசியில[என்னவோ எப்போதும் காசுகொடுத்து துண்ணுரதுபோல] வடை திங்கனுமேன்னு வெ வெ வே ந்னு கத்திக்கிட்டே[என்ன காக்கா
கா கான்னுல்ல கத்தும் அச்சொ இது வெள்ள காக்கான்னு சொன்னேனே] பறந்து திரிஞ்சிசும் ஒன்னும் கிடைக்கலையாம் அப்படியே வந்துகிட்டு இருக்கும்போது

திருட்டு நகையெல்லாம் வாங்கும் பிளாக்[கருப்பு] சேட்டு கடைபக்கம் பறக்கும்போது கடையிக்குள்ளே சேட்டுக்கு முன்னாடி ஒரு சில்வர் தட்டுல வட்டமா இருந்த தங்கக்காயின  பார்த்த வெள்ளக்காக்காவுக்கு ஆகா வடையிருக்கே!
அதுவும் வித்தியாசமா ஹோலில்லாமயிருக்கே!
கடைக்குள் இருப்பதால் வடை இப்படிஈ மொய்காம மின்னுதோ எப்படியிருந்தாலும் சரி இத எடுத்து சாப்பிடனும் அப்பதான் இன்னக்கியுள்ள பசிபோகுமுன்னு நெனச்சிகிட்டே
எதிர்தமாதரி உள்ள மரத்துல நின்னுகிட்டே[எப்படி உக்கார முடியும் அதாலா?  முடியும் நீ பாக்கலனா விடு விடு] கண்கானிச்சிகிட்டே இருந்திச்சாம் அப்போன்னு பாத்து சேட்டு போட்டிருந்த தொப்பி சரிந்துவிழ அத எடுக்க குனிஞ்சப்ப வெள்ள காக்கா காயின அபேஷ் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடுச்சாம்


அச்சோ என் காயின் தங்கக்காயின்  புடிங்கன்னு சேட்டு காக்கா பின்னாலேயே கத்திக்கிட்டு ஓட,
காக்கா பறந்துவந்து கிரேண்மா வீட்டுமேல உக்காந்து வாயில் இருந்த வடையின்னு நெனச்ச காயின கையில் //ச்சே// காலில் பிடிச்சிக்கிட்டு.


கிரேண்மா கிரேண்மா நீயும் சுடுவியே வடையின்னு சொல்லி ஒரு வீணாப்போன வடைய அதில வேற ஓட்டைய போட்டு மாவையும் ஆட்டயபோட்டுடுவ,
இதபாத்தியா மினுமினுன்னு சும்மா சோக்கா மின்னுது இதுதான் வடையின்னு சொன்னப்பத்தான்
அதஉத்துப் பார்த்த கிரேண்மாவுக்கு ஆகா இது
அதுவாச்சேன்னு மனசுக்குள்ளே தந்திரம் ஓட,

வெள்ள காக்கா
வெள்ள காக்கா அது வடையில்லப்பா உனக்கு அது சாப்பிடமுடியாது நாவேறவடை தர்றேன் இதை எனக்குதான்னு கேக்க


ஆங் அஸ்கு புஸ்கு
நானே கஸ்டப்பட்டு அலஞ்சி உழச்சி இத கொண்டு வந்திருக்கேன் இதபோயி கேக்குறியே! எனக்கு பசிக்கிது நான் சாப்பிடனுமுன்னு நீ போன்னு சொல்லி சாப்பிடப்போகும்போது



கிரேண்மா சொல்லிச்சாம் காக்கா காக்கா
நீ வெள்ளயா இருக்குறதால ரொம்ப அழகாயிருக்க அதனால கண்ணுபட்டுவிடும் இந்தா மொதல்ல இந்த கருப்புச்சட்டைய போடு இல்லன்னா மத்த காக்காவெல்லாம் உம்மேல பொறாமப்படுமுன்னு சொல்லிச்சாம்


உடனே காக்காக்கு மனசுக்குள்ளே மத்தாப்புபூத்திச்சாம், மத்தக் காக்கயவிட நாமா ரொம்ப அழகாயிருக்கோமாம் அதுவும் வெள்ளையாவேறயிருக்கோமாம் சரிதான் கண்ணுபட்டுட்டா கருத்துபோயிடுவோமுன்னு நெனச்சிக்கிட்டே


காலிலுள்ள தங்கக்காயினையும் பாத்திச்சாம்  கிரேண்மாவையும் பாத்திச்சாம்
அப்ப கிரேண்மா சொல்லிச்சாம்


வெள்ள காக்கா வெள்ளக்காக்கா நா சுடும் வடையப்போல இந்த வடைய  நீ பிச்சி சாப்பிட முடியாது கொடு நான் உரலுல இடுச்சு தாறேன்
அதுக்குள்ளே இந்த கருப்புச்சட்டையபோடுன்னு சொன்னதும்


ஆகா இது நல்ல ஐடியாவாயிருக்கேன்னு,
கிரேண்மா கிழவி நீ ரொம்ப நல்லவுகளா இருக்கீயே!
சரி இந்தா நல்லா இடிச்சுதான்னு தொப்புன்னு கீழேபோட்டுச்சாம் வெள்ளகாக்கா தங்காயின

ஓடிவந்த கிரேண்மா தங்காயின எடுத்துகிட்டு பக்கத்தில் கிடந்த கரிக்கட்டை எடுத்து இந்தா காக்கா சூ சூ ஓடிப்போயிடு இல்லேன்னா வடை சுடும் அடுப்பில வச்சி உன்னச்சுட்டுடுவேன்னு சொன்னதும்
வெள்ளக்காக்கா அச்சோ கிழவி நம்மை ஏமாத்திவிட்டதேன்னு சொல்லி
மல்லாக்க பறந்துபோச்சாம்...

//டிஸ்கி //அய்யோடா இதுக்குபேரு கதையா?

கதச்சொல்லச்சொன்னா கதவிட்டுகிட்டிட்டு இருக்கியே!
எத்தனை தபா இந்தகதய கேட்டிருப்போம். இதுக்கு நீ சொல்லாமலே இருந்திருக்கலாம் அப்படின்னு நெனச்சீங்கன்னா. அதுக்கு நான் பொறுப்பல்ல
பச்சக்கொய்ந்தயபோய் கத சொல்லுன்னு சொன்ன இந்தமாதரிதான் சொல்லும். வெவெவ்வே

சின்னப்புள்ளயபோய் கத சொல்ல சொன்ன நம்ம அக்பருக்கும். நிஜாமுதீன் அண்ணாவுக்கும் அடியகொடுப்பீகளோ அவார்ட கொடுப்பீகளோ எது கொடுத்தாலும் அவங்களுக்கு கொடுங்க. கருத்தையும் ஓட்டையும் மட்டும் எனக்கு கொடுங்க! எப்புடி
ஆகாமொத்தத்தில் என்றைக்கு சொன்னாலும் கத கததான் அந்த கதையில் மாற்றம் வரனுமுன்னா மனிதனிடம் முதலில் மாற்றம் வரனும் என்ன நான்சொன்னது சரிதானே!

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவங்க இருப்பாங்க இல்லையா
நீங்க ஏமாறுறவங்களா? ஏம்மாத்துறவங்களா?
இல்லையின்னா அந்த ரெண்டு பேரையும் திருத்துற நல்லவங்களா.?
இல்லை யார் எக்கேடு கெட்டும் போகட்டும் நமக்கென்னன்னு போறவங்களா?
நீங்களே முடிவெடுங்க! எதுவாக இருக்கோனுமுன்னு.
நான் எப்போதும் ஏமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கப்பா ...

அப்பாடா கதைகேட்டு முடிச்சவங்க களைச்சி போயிருப்பீங்க, அதனால இந்தாங்க இதுல எதுவேணுமோ கலக்கிகுடிசிட்டு தெம்பா போங்க ஏமாத்தவோ ஏமாறவோ!
என்ன செய்ய ஏமாற்றக்கூடாதேன்னு வீட்டில் இருக்கிறதவச்சி போட்டோ எடுத்துப்போட்டா
இல்லாதத கேட்டு ஏமாறுகிறேன்னு நிக்கிறவுகள என்னச்செய்ய
பேபின்னு நெனப்பு இந்த ஜெய்லானி அண்ணாவுக்கு அதான் இன்னமும் அமுஸ்பிரே கேட்குது..

அட நம்ம நாடோடி ஸ்டீபனின் ரகசியம் இந்த பூஸ்ட் டிலா


இல்லாதத இருக்கிறதா போட்டுட்டேன் எடுத்துக்குடிச்சிட்டு
ஏமாறுங்க! ஏமாறுங்க!

இதுக்கெமேல யாரும் கதை சொல்லனுமுன்னு தோனிச்சின்னா
ஸ்டாட் மியூசிக்.. தொடர்ந்து கொல்லலாம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது