நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கண்ணீரால்...


ருவமில்லாச் சோகம்
உள்ளத்தின் வழியே உதிரத்தில்
ஊடுருவிச் சென்று -நிம்மதியை
உதிர்க்கப் பார்த்து

வாடி உதிரும் வருத்தம்
வகை வகையாய்
வரிசைப் படுத்தி
வஞ்சையில்லாமல் வதைத்து

ரறியா மனஉளைச்சல்
உள்ளுக்குள் உருகியோடி
உடலை வாட்டி
உயிரை உலரவிட்டு உதிர்த்து

ன்னம்பிக்கையை தளரச்செய்ய
தாரை தாரையாய் –தாடையைத்
தடவி தவிக்க வைத்து

சொட்டு சொட்டாய்
பட்டுக் கன்னம் வழியே
உதட்டை உரசிசென்று
உப்புக் கரிப்பால்
உள்ளத்தை சிதைக்கப் பார்த்து

சியும் மவுனமாய்
கரையும் கண்ணீர்-மன
கஷ்டத்தை கடைந்தெடுத்து- பின்
மெல்ல மெல்ல மனதை தேற்ற
கரைந்த கண்ணீரே ஆறுதலும் தருகிறது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது