அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவனின் சாந்தியும் அருளும் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.
என் கிறுக்கள்களையும் கவிதைகளென்று நினைத்து.தங்களின் அன்பான கருத்துக்களின் மூலம் ஊக்கம் தந்து என்னையும் ஒரு கவிதை தொகுப்பு வெளியிடுமளவிற்கு கொண்டுவந்த உங்கள் அனைவருக்கும். என் நன்றிகலந்த கண்ணீரை தாரை வார்க்கிறேன் மனநெகிழ்வோடு..
வரமுடிந்தவர்களின் அன்பான வருகையையும். வரமுடியாச் சூழலிலிருப்பவர்களின். அன்பான பிராத்தனைகளையும். எதிர்பார்த்திருக்கும்
உங்கள் அன்புடன் மலிக்கா

இன்ஷாஅல்லாஹ் வரும் 25/02/2011 வெள்ளிக்கிழமை அன்று
மாலை 6 மணிக்கு. லேண்ட் மார்க் ஹோட்டல் அல் நாசர் ஸ்கொயர் துபாயில்.பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை நடத்தும் இஸ்லாமிய இலக்கியவிழா மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற இருப்பதோடு,என்னுடைய முதல் கவிதை தொகுப்பான
”உணர்வுகளின் ஓசை”
புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது. தாங்கள் அனைவரும் வந்து இவ்விழாவினில் கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இடம்: லேண்ட் மார்க் ஹோட்டல், அல் நாசர் ஸ்கொயர் துபாய்.
நாள்: 25-2 -2011 வெள்ளிக்கிழமை
மாலை 6.00 மணி
சிறப்பு விருந்தினர்கள் :
டாக்டர்.சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தலைமையகம் - சென்னை.
டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்சங்கம்.
கவிச்சித்தர்.மு.மேத்தா
கலாபூஷணம்.மானா மக்கீன் எழுத்தாளர்-இலங்கை
இசையரசி. நூர்ஜஹான் இஸ்லாமியப் பாடகி -இலங்கை
அனுமதி இலவசம்!!
அனைவரும் வாருங்கள். விழாவை சிறப்பாக்கித் தாருங்கள்.
அன்புடன்
மலிக்கா ஃபாரூக்
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.