நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வரமா--சாபமா


உன்
ஓரவிழிப்பார்வையில்
என்னுள்ளம்
ஈரமாய் நனைந்தது
நனைந்த நினைவுகளை
நித்தமும் நினைக்கின்றேன்


உன்னை
நினைத்த நாள்முதலாய்
நிலவு சுடுகிறது
நெருப்பு குளிர்கிறது
காகம் மயிலானது
கரும்பு கசப்பானது
கரையில் நிற்க்கும்போதே
மனம்
கடலில் தத்தளிக்குது


தனியாய் புலம்புகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய் நினைத்துக்கொண்டு
எனக்குள் நானே சிரிக்கின்றேன்


கார்மேகம் தலையைதொட
வான்மழை மடியில் விழ
வண்ணக்கனவு விழியில் வர
வசமாய் மாட்டிக்கொண்டேன்
உன்வசத்தில்

ஏனிந்த போராட்டம்
எதற்கிந்த ஆர்ப்பாட்டம்
கல்நெஞ்சம் எனக்குள்ளே
கரைந்தோடுது நீரோட்டம்

எனக்குள் நீவந்தாய்
விழிவழியே
மறுஉயிர்தந்தாய்
மறந்துவிட வழியில்லை
மரிக்கின்ற நிலைவரையில்

உன் ஓரவிழிப்பார்வை
என் உயிருக்குள் உறைந்தது
வரமா? இல்லை சாபமா?
விடைசொல் விழியே
நீ
என் விலாசம்வரும்
வரையில்
என்நெஞ்சம் உன்
நினைவரையில்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்"

வாடிய மலர்



வாடி வதங்கி
வாசனைபோன மலர்
தோல் சுறுங்கி
கூன் விழுந்த கிழவி


தன் வயிற்றுப்பசியைப்
போக்க
வாசனை நிறம்பிய
மலர்களை
விற்க்குது கூவி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது