திடீரென்று
சடசடவென கொட்டிய மழை
பெருந்துளிகளாகி
என்தேகத்தைத்தொட
சட்டென்று
குடையெடுத்து பட்டென்று
விரித்தேன்
ஆனபோதும்
நனைந்துகொண்டிருந்தேன்
சுற்றும் முற்றும்
பார்த்தபோதுதான் தெரிந்தது
மழை மனதிலும்
நான்
வெறும் குடையிலும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்