நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏழ்மையிலும்..


ஓலக் குடிசையில மச்சான்
ஒன்னா யிருப்போமுங்க
கஞ்சிகூட கருவாடு சேத்துண்டு
கொஞ்சி கொஞ்சி மகிழ்வோமுங்க

கடனும் நோயுமில் லாமதான் மச்சான்
கவனமாக இருப்போமுங்க
கொஞ்சநஞ்சம் சேத்துவச்சி நாம
கொலந்தகள படிக்கவைச்சி பாப்போமுங்க

கந்தல் துணியானாலுமே மச்சான்
கசக்கிகட்டி அணிவோமுங்க
குடிசை ஓட்டைவழி நிலா வந்துதான் நம்ம
குதூகலித்து வைக்குமுங்க

மேல்தட்டபாத்து எச்சிலூ ராமத்தான் மச்சான்
கீழ்தட்டகண்டு கண்ணீர் விடுவோமுங்க
அடுத்தவங்கள பாத்து ஏங்கமாத்தான் நாம
அழகாக வாழ்வோமுங்க

வாழ்க்கைக்கு தேவையெல்லாம் மச்சான்
வசதி வாய்ப்பு மட்டுமில்ல
அன்பும் அரவணைப்பும்தான் வாழும்
வாழ்வுக்கே ஆதாரமுங்க

நிம்மதிகள் வேறெங்குமில்ல
ஏன்பொண்சாதியே
நெறஞ்சியிருக்கு ஓன் சொல்லுக்குள்ள
போதுமென்ற மனசுக்குள்ள-ஒரு
பூந்தோட்டமே இருக்குபுள்ள

மனமேத்து ஒத்துக்கிட்டா
ஏழ வாழ்க்கவிட இன்பமில்ல -மரிக்கொழுந்தே
போதும் போதும் இது போதும்புள்ள
உன்கூட ஈருலகமும் வாரேன்புள்ள
என்னக்கிம் இனிக்க இனிக்க வாழ்வோம்புள்ள.


”கவியருவி”
அன்புடன் மலிக்கா 
                                                                          இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது