நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இயற்கையற்றதால்!

 



பூக்கள்
விழுந்தாலும்
நசுங்கிறது பூமி

பூபாளம் கேட்டும்
புண்ணியமில்லாமல்
புதைகிறது புற்பூண்டுகள்

போகுமிடமெங்கும்
வரண்ட பூமியின்
வம்சா வழிக்கிளைகள்

கால வினோதத்தால்
தன்நிலை மாற்றிய
கால சூழ்நிலைகள்


மழைநீரை தன்மடியியில்
ஏந்த முடியாமல்
தாய்மண்ணின் நிலை

தார்சாலை மோகத்தில்
தார்மீகத்தை யிழந்த
மண்சாலை

மக்கிபோக வழியற்றவைகளால்
மாசுகளின் பிடியில்
மனிதநிலை

தவியாய் தவிக்கிறது
இயற்கையின்
இலை தலை நிலை

”இப்படியே”

தொடரும் நிலைகளால் -பலரின்
வாழ்க்கையின் நிறம்
வெறுமையாக காட்சியளிக்கிறது
              “ ‘ “
இதனால்தானோ என்னவோ
இந்திய ரூபாயின் மதிப்பும்
இறங்கிகொண்டே போகிறது..

---------------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது