பறந்தன பறவைகள்
ஒரு மரத்துக்கிளிகளாய்
ஒரே கூரையின்கீழ் வாழ்ந்த எங்களை
ஒரே ஒரு நாளின் மின்சாரத்துண்டிப்பு
ஒவ்வொரு மூளையில் தள்ளிவிட்டது
பாரதவிலாஸாய் கூடியிருந்த நாங்கள்
இப்பொழுது ஆளுக்கொகொரு
பக்கமாய் பிரிந்துவிட்டோம்.
கடல்கள் கடந்துவந்த எங்களுக்குள் ஓர்
பாசப்பிணைப்புகள் கண்கள் பார்த்து வார்த்தைகள் கோர்த்து-
மனங்களை இணைந்த மகத்தான நட்புகள்
சிலநேரங்களில் பாஷைகள் புரியாதபோதும்
அகிலத்துக்கே புரிந்த பாஷையான- சிரிப்பும்
சைகைகளும் எங்களை இறுக்கி பிணைத்தன
பாலைவன ரோஜாக்களாய் பகிர்ந்துகொண்ட
பதிவுகள்தான் எத்தனை எத்தனை
சட்டென்று துண்டிக்கப்பட்ட மின்சாரத்தால்
மனங்கள் சஞ்சலங்களுக்கு ஆளானது
திசைகள் மாறியபோதும் எங்களின்
நினைவுகள் மாறிடாது
நேரங்கள் கிடைக்கும்போது ஒருநொடியாவது
கண்டுவந்துவிடனும் என எங்களுக்குள் கண்டிசன்
காலங்கள் தரும் எத்தனையோ மாற்றங்கள்
அதில் மாறாதது மாற்றம் என்ற ஒன்றுமட்டுமே
அந்த மாற்றம்போல்தான் ”நட்பும்”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
தேடுதல்
அன்பு என்ற
அருமருந்து
அகிலமெங்கும்
கொட்டிகிடக்கிறது
உள்ளொன்று வைத்து
புறமொன்றும்
பணக்காரன்
என்றால் ஒருமுகம்
பாமரன்
என்றால் ஒருமுகமென
பிரித்துப்பார்ப்பதா
தேடுகிறேன் தேடுகிறேன்
தெளிவான முகங்களை
அதில்
எது தெளிவென்று
இன்றுவரை புரியவில்லை
அத்தனை முகங்களுக்குள்ளும்
அன்பும் உண்டு
ஆன்மாவும் உண்டு
ஆன்மீகமும் உண்டு
ஆதங்கமும் உண்டு
’ஆதலால்’
எந்த மனிதர்கருக்குள்
எது இருந்தபோதிலும்
மரணம் வரும்வரை
மனிதர்களாய் வாழ்வோம்
பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
மனம் பொருந்திய அன்போடு
மனமகிழ்வுடன் வாழ்வோம்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)