”தீ”க்குச்சி யில்லாமல்
”தீ”மூட்டி எரிக்கும்
தீபங்களைக் கூட
”தீ”பந்தங்களாய் மாற்றும்
தேள்கொடுக்கும் சொல்லால்
தினந்தோறும் விசமேற்றும்
கொடுஞ் செயல் புரிந்து
கருநாகத் தீண்டலுண்டாக்கும்
சந்தோஷ சாம்ராஜ்ஜியத்தை
சந்தி சிரிக்க வைக்கும்
சம்சார சந்தனத்தை
சாக்கடையிலிறக்கி மகிழும்
இனிவைகளை இழவுகளாக்கி
ஈனங்களை துணைக்கு அழைக்கும்
பூச்சியும் புழுவாகி
புண் நோண்டித்தின்று பிழைக்கும்
தேகம்
சந்தேக தீயில் வேகும்
சந்தோஷம்
சந்தேக தனலில் கருகும்
தன்
வீட்டையேக் கொளுத்தி
வெளிச்சம் கிடைத்ததென
வெற்றிக் களிப்பில் மிதக்கும்
வெற்றியின் கூலி -
தன் குடும்பமெரிந்த சாம்பலே
என்றுணரும் வேளையில்
சாம்பலும் காற்றில் கலக்கும்
சந்தேக நோயால்
தனக்கே பித்து பிடிக்கும்
மனமுரண்டுக்குமுண்டு
மருந்து
இல்லையே
இழிந்து வருத்தும் சந்தேகத்திற்கு
எதுவும்
வேண்டாம[டி]டா சந்தேகம்-அதில்
இழந்திடுவாய் உன்னையும்..

”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.