விலக்கப்பட்ட
கனியை உண்டதால்
விஸ்வரூபமெடுத்து
விரிந்து பரந்தது
மனிதயினம்!
விலகப்பட்டதால்
உருவானதாலோ என்னவோ!
விலகியே நிற்கிறது இன்னமும்
விதண்டா வாதங்களால்
மனிதமனம்!
அன்று உண்டகனிக்கு
விதிவிலக்கு கொடுத்து
விமோசனம் பெற்று
இன்று அக்கனியை உண்பதால்
ஆரோக்கியமாகிறது
மனித உடல்!
ஆனால்!!!
உண்டதினால் ஏற்பட்ட
உஷ்ணத்தின் உச்சம்போல்
உள்ளங்களில் உஷ்ணத்தையடக்கி
உலகுக்காக குளிர்ச்சியாய் வேஷமிடும்
மனித மனங்கள் மட்டும்
விமோசனமே யில்லாததுபோல்
வேறுபட்டே நிற்கிறது
.
விலக்கப்பட்ட கனிக்கு
கிடைத்த விமோசனம்போல்
கிடைக்குமா?
மனித மனதுக்கும்!!.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...