
தோல்விகள்கண்டு
கிடைக்கும் வெற்றி
சந்தனமாலை போன்றது
அதுகாயக் காய
சாந்தமான வாசம்
வீசிடும்
தோல்விகளின்
வடுக்களை
தொட்டு பார்த்தால்
மீண்டும் மீண்டும்
வெற்றிமாலை
தோளில்
வாங்கத்தூண்டும்
குறுக்கு வழியில்
சட்டெனக்
கிட்டும் வெற்றி
ரோஜா மாலைப்
போன்றது
அது
வாடிப் போனால்
வாசம்போய்
வனப்பும் உதிர்ந்து
எஞ்சி மிஞ்சுவது
நார் மட்டுமே
திறமை முழுவதும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
வெளியுலகைக் காண
துணிவற்றிருந்தால்
திறமை தேடிவருமா
வெற்றிக்கு வித்திடாமல்
தொட்டாச்
சுறுங்கியைப்போலே
தோல்விகளைக்கண்டு
துவண்டு கிடந்தால்
வெல்லமுடியுமா
தன்னம்பிக்கையென்னும்
துணிவைக்கொண்டு
தோல்விகளை
எதிர்த்துப்பார்
எதிரியாய் வந்த
தோல்விகள்கூட
உன் துணிவு கண்டு
துவண்டுபோய்
தூர ஓடிவிடும்
உன்வாசல்தேடி
வெற்றிமாலை
வந்து சேர்ந்திடும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்