நெஞ்சமெங்கும் நினைவலைகள்
நிலவில் உதித்த
மஞ்சப்பூக்களாய் பூத்திடவே-உன்
மடியில் கிடந்தேனே
மடிசாய்ந்து முகம்பார்த்தேன்-என்
மனதுக்குள்
மஞ்சம்கொண்ட உன் நினைவுகள்
மரகத வீணை மீட்டிடவே!
அன்பைச்சொரிந்து அனுதினமும்
அலைபாய விடுகின்றாய்
அந்திவானம் சிவப்பதுபோல்
அதரம் சிவக்க வைக்கின்றாய்
குளிர்கால இரவுகளில்
கோடைவெப்பம் உன்னாலே
வெயில்கால தருணங்களில்
குளிரடிக்குது தன்னாலே
நினைவுகளின் தாக்கத்தால்
நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
உணர்வுகள் மரித்தபின்னும்
உன்நினைவோடு நானிருக்க
ஒவ்வொரு மணித்துளியும்
ஓராயிரம் ஒளிக்கதிராய்
நிலையாக நிலைத்திருக்க
ஒவ்வொரு நொடியும்
உருகி உருகி வேண்டுகிறேன்.......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்