நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஊளையிடும் சோதனைகள்



இறை சோதனையின்
இடிபாடுகளுக் கிடையில்
அகப்படாதோர் யாருமுண்டோ!

எலும்பும் சதையும் போர்த்திய
எந்தவோர் மனிதனையும்
விட்டு வைக்காமல்

அச்சமூட்டி எச்சரிக்கும்
இறை சோதனைக்கு
உட்படாதோர் யாருமுண்டோ?

பனிப் புயலென்றும்
சூராவளிக் காற்றென்றும்
கடலின் கொந்தளிப்பென்றும்
எரிமலை குமுறலென்றும்,

புதிது புதிதாய் பெயர்வைத்தபடி
சுற்றும் பூமியையே சூரையாடுதடி
இயற்கையும் இயற்கையெய்தபடி
இவைகள் இறைசோதனையின் சாகுபடி!

சாகவரங்கள் பெற்றோர்
இப்புவியில் உண்டோ
சாதனை பட்டியலில்
சாவற்றவறென்ற முத்திரையுமுண்டோ!

எழும்புப் பிண்டங்களை எச்சரிக்கவே
எதிர்பாரா விதமாய் நிலைகுலையும்படி
உச்சரித்து செல்கிறது
ஊளையிடும் சோதனைகள் போதனைகளாய்!

இருந்துமேனோ -இவ்வுலக
மாயையில் மவுண்டுகொண்டே
மனிதக் கூட்டங்கள்
உயிரிருந்தும் ஜடங்களாய்...

-----------------------------------

கவிதை வயல் - 27

  ”கவியருவி”
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது