நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
வந்துட்டாங்க புத்திமதி சொல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வந்துட்டாங்க புத்திமதி சொல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேமிப்பு!





சேர்த்துகொள் சேர்த்துக்கொள்
சம்பாரிப்பதில் சேர்த்துக்கொள்
சேர்க்கத் தவறி விடும்போது
சோர்வு தனதாகிவிடும்!

சேர்த்துகொள் சேர்த்துக்கொள்
சிலவு செய்வதிலும் சேர்த்துகொள்
சேர்க்கத் தவறி விடும்போது
சிக்கல் உனதாகிவிடும்!

கடுங்சிக்கனம் கஞ்சத்தனம்
கடைந்தெடுத்த கருமித்தனம்
கடுகளவேனும் இருந்தாலும்கூட
கடுகும் கொடுக்கவிடாத மனமாகிவிடும்!

கண்டபடி சிலவு செய்தால் -பின்பு
கஷ்டம் இல்லத்தில் புகுந்துகொள்ளும்
கவலை மனதில் குடியேறி
கண்ணீர்விட்டு அழ வேண்டிவரும்!

நல்ல உடம்பின் நலமும் கெடும்போது
கட்டு கட்டாய் பணமும் வேண்டும்
நாலு காசு கையில் இல்லையெனில்
காலம் போகப்போக தலைக்கிறுக்கு அதிகரிக்கும்!

சேமிப்பு கொஞ்சம் இல்லையென்றால்
உடலிருந்தும் உயிரற்ற நடைபிணமாயக்கூடும்
முதுமை சிறந்து பலனுமடைய
சேமிப்பின் பலத்தைக் சற்று கூட்டவேண்டும்!

சேமிப்பு இல்லா இடங்களிலே
சோதனைகள் சூழ வாய்ப்பிருக்கும்
நிகழ்கால உழைப்பினிலே
எதிர்கால சேமிப்பின் நன்மையிருக்கும்!

பணம் சேர்க்கும் போதினிலே-நல்ல
குணமும் சேர்த்[ந்]து சேர்க்கவேண்டும்
இரண்டும் சேர்ந்துயிருந்தால்தான்
இல்லம் இதயம் இரண்டின் சுகமும் தொடரும்..

-----------------------------------------------------
டிஸ்கி// அதுக்காக, கண்டதிலும் நின்னடதிலும் போய் பணத்தை சேர்த்துவைக்கிறேனும், வட்டி வானுயரதரோமுன்னு சொல்வதை நம்பியும் உள்ளதையெல்லாம் மொத்தமா கொடுத்துவிட்டு அம்போன்னு நின்னுடாதீங்க. எத்தனையோ நல் வழிகளிருக்கு அதனை பயன்படுத்தி சேர்த்துவைங்க,சிரமப்படுவோருக்கு வட்டியில்லாமல்  கொடுத்துதவியும் சேர்த்துவைக்கலாம், இரட்டி நன்மையும் உண்டாகும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

கல்யாணச் சந்தையிலே!...























போட்டோ மேல் ஒரு கிளிக்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வேண்டுகோள் விடுக்கிறது...



உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையாகிறது

”இனியாவது”
கலந்து ஆலோசியுங்களேன்
கருகலைப்புகள் என்ற பெயரில்

தாயின் கர்பத்துகுள்ளே நாங்கள்
தகர்த்து எரியப்படாமலிருப்போம்

உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்
உள்ளமிருப்போருக்கு - கேட்குமா!
இக்கூக்குரல்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அழுகிய பரிசு!

தன்னிநிலை மறந்து
தீய வழியை
தேடிப்போகும் உடலுக்கு
தனக்குத்தானே கிடைக்கும்
தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்

இறைவன் வகுத்த நியதியை மீறி
தேடிய திரிந்த இன்பத்திற்கு
இறைவன் தந்த பரிசு
திக்குமுக்காட வைக்கும்
தீராவியாதி

மாற்றான் தோட்டத்து
மல்லிகையில்
தேனெடுக்க சென்ற
மதியிழந்த வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
அழுகவைக்கும் இந்த எய்ட்ஸ்

தான்பெற்ற இன்பத்திற்கு
தன்துணைக்கும் தன்வாரிசுக்கும்
துன்பத்தைதரும்
திட்டமிட்ட சதிவாதியே!

தவறென்று தெரிந்தும்
தத்தித்தாவி
தித்திப்பென்று தீங்கில் விழுந்து
தீயில் கருகும் மதிகளே!

உயிருள்ளவரை
உள்ளச்சத்துடன் வாழுந்து
உங்களை நம்பியுள்ளோர்களையும்
உருக்குழையாமல் வாழவிடுங்களேன்...

டிஸ்கி// ஏற்கனவே பரிசு என எழுதிய கவிதைதான் இது.
 கூடுதல் வார்தையோடு தற்போது மீண்டும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கருப்பையின் கதறல்.

நன்றி கூகிள்
தளிர்க்கும் தளிரை
தழைக்கவேண்டிய உயிரை
தாய்மையின் தரமறியா
தான்தோன்றித் தனத்தால்

உள்ளங்கள் சந்தித்து
உடல்கள் சங்கமித்து
உலகிற்கு ஓர் உன்னத உயிர்
உலாவரத் துடிக்க

உடலுக்குள் இருக்கும்
உறுப்பென்னும் கருப்பையில்
உலவிடும் ஊதாப்பூவை
உருத்தெரியாமல் அழிக்க

கருப்பையைக் கதறக் கதற
கருவறுக்கும் கூட்டமே
காதில் கேட்குதா
கர்பப்பையின் கதறல்

உயிர்வதைச் சட்டம்-உலவும்
உயிர்களுக்கு மட்டும்தானா!
உடல் உறுப்புக்குள்
ஊசலாடும் உயிர்களுக்கில்லையா!

சங்கமிக்கும் முன் சற்றே
சிந்தித்து உடல்கள் சந்தித்தால்
சங்கமம்
சரித்திரம் படைக்கவில்லையென்றாலும்
சாந்தியடையுமே சதையென்னும் உயிர்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

என் இனிய பெற்றோர்களே! உங்களுக்குத்தான்!..



அனைத்து பெற்றோர்களும் அப்பாடா என பெருமூச்சுவிட்டு,
 மீண்டும் ஓரு பெருமூச்சுவிட காத்திருக்கும் நேரம் தற்போது இல்லையா!. பெருமூச்சோடு சேர்ந்து சில பெற்றோர்களுக்கு பெரும்குடல் சிறுங்குடல் எல்லாம் சேர்ந்துவிடுவதுபோன்ற கலக்கமும் மனதில் இருக்கும்.
 தேர்வுகள் முடிந்து தேர்ச்சிகளும் பெற்று அடுத்தது என்ன படிப்பது. எங்கு சேர்ப்பது. எந்த பள்ளி சிறந்தது. எந்த காலேஜ் சிறந்தது. அதுவும் ஹாஸ்டல் வசதியெப்படியிருக்கும். அதற்கு எவ்வளவு சிலவாகும் என மண்டையைக் குடையும் கேள்விகள் பலஎழுந்து எழுந்துஅடங்கும்.


இச்சமயத்தில்தான் மிக கவனமாக செயல்படவேண்டும்.
படிப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிக மிக முக்கியமானது. அதை சரியானநேரத்தில். சரியான விதத்தில். சரியாக தேர்வுசெய்து அவர்களுக்குத்தரவேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை. அவர்களின் எதிர்காலமே இப்படிப்பில்தான் இருக்கிறது என்பதை முதலில் அவர்களுக்கு உணர்த்துதல் மிக அவசியம். அப்புறம். அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அவர்களின் விருப்பங்களைகேட்கவேண்டும்.


அவர்கள் எடுத்திருக்கும் முடிவும். தேர்வும். சரியானதாக இருக்கும் பட்சத்ததில் அவர்களின் விருப்பத்திற்கே படிக்க அனுமதிப்பது சிறந்தது. அல்லது அது சரியானதாக இல்லாதபட்சத்தில் எடுத்துச்சொல்லுங்கள். ஏன்? எதனால்? என்பதையும் சற்று விளக்கிச்சொல்லுங்கள். அத்தோடு குடும்ப சூழலையும் அவர்களுக்கு புரிவதுபோல் சொல்லுங்கள்
நம் குழந்தைகள்தான் அவர்களிடம் பக்குவமாக சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். ரொம்ப கறாராக நடந்து. இவங்க என்னத்த சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலையை உருவாக்கிவிடாதீர்கள். நிதானம் அவர்களைவிட நமக்குதான் மிகமுக்கியம்.






அடுத்து தேர்ந்தெடுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி அதில் மிக கவனமாக இருங்கள். தரமான கல்லூரிகளாக! அதேசமயம் உங்கள் வசதிக்கு தகுந்தார்போல் தேர்ந்தெடுத்துச் சேருங்கள். அதற்குமீறி சேர்த்துவிட்டு பின்பு அவஸ்தைக்குள்ளாகாதீர்கள். இதனால் பாதிப்படைவது இருவருமே! நிறைய மார்க் வாங்கியும். வசதியில்லாத காரணத்தால் தரமான கல்லூரிகளில் சேர்க்கமுடியவில்லையா! தொண்டு நிறுவனங்களையும். கல்விக்காக உதவும் நல்லுள்ளங்களையும் தயங்காமல் நாடுங்கள். கல்விக்காக உதவ எத்தனையோ மனங்கள் காத்திருக்கு அவைகளை நல்வழிக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


அடுத்து ஹாஸ்டல். ஹாஸ்டலில் தங்கிப்படிக்கவைப்பது தற்காலத்தில் பேஷனாகிவிட்டது.முதலில் ஹாஸ்டலில் தங்கிதான் படிக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்துகொள்ளுங்கள். ஏனெனில். ஹாஸ்டல் என்பது குழந்தைகளுக்கு நல்லன்பைதரக்கூடிய இடமாக இருக்குமா!
எல்லாம் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாவும்.  ஏதோ எதற்கோ படிக்கவந்துள்ளோம் என பொடுபோக்குதனமான படிப்பை படிக்குமிடமாகவும் தானேயிருக்கும்.   பிஞ்சுமனசு பயமறியாது.எவ்வித  பயமில்லாமல் நாம் இங்கே எதைச்செய்தாலும் யார் கேட்கப்போகிறார்கள். எதையும் செய்துக்கொள்ளலாம் எங்கும் மனம்போனபோக்கில் போகலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுமே?


அங்கே அன்னையின் அன்போ, தந்தையின் அரவணைப்போ,
கிடையாது. கிடைக்காது. நினைக்கலாம் அதெல்லாம் பார்த்தா படிப்பு
எப்படி வருமென கண்டிப்போடு இருந்தால்தான் படிப்பு ஏறுமெனவும். தனிமைபடுதப்பட்டால் தன்னால் முன்னேறிவிடுவார்களெனவும் நினைப்பது சரியானதா!




அதுவும் சரிதான் என்றாலும் சிறுவதியேலேயே அதற்காக தனிமைபடுத்தும் சிறை அவசியமானதா! அங்கே கூட்டம் கூட்டமாக இருந்தாலும் மனதளவில் தனிமைச்சிறைதானே! தட்டிக்கேட்க ஆளில்லாமல். கட்டுக்கடங்காமல். [ஒருவார்டனை சமாளிப்பதா பெரியவிசயம்மென] எத்தனை எத்தனை தவறுகள்.
எத்தனை எத்தனை குற்றங்கள். பிஞ்சியிலேயே வெம்பி வெதும்பவிடவும் யார்காரணம். சில வேளை யாருக்காக ஓடாய் தேய்கிறார்களோ அவர்களே இல்லாமல் போய்விடுகிறார்களே இதெற்கெல்லாம் எது காரணம்! யார் காரணம்?


ஆனால் தற்காலத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் குழந்தைகளை கவனிக்க வீட்டில் ஆளில்லாமல் இருக்கும் பட்சத்தில் ஹாஸ்டலில் விட்டுவிடுவதுமேல் என நினைப்பது சரி. அங்கே தன் குழந்தை எப்படியிருக்கு. எந்த மனநிலையில் இருக்கு என்று நிறைய பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. அவன் நல்ல நிலைக்கு வரவேண்டும். அதற்காகதானே நாங்களிருவரும் மாடாய் உழைக்கிறோம்.என்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கு ஓடாய் தேய்வது பலநேரம் பலனற்றுப்போய்விடுகிறது. ஒரே ஒரு குழந்தை அதுவும் ஹாஸ்டலில் என்ன கொடுமை. அக்குழந்தை வளர்ந்து ஆளாகி எப்படி நம்மை கடைசி காலத்திலோ! அல்லது முடியாமல் போகும் நேரத்திலோ தம்மை வைத்துபார்ப்பார்களா?.


சின்னச்சிறிய வயதிலேயே நாம்தானே அவர்களுக்கு கற்றுக்கொடுகிறோம் தனிமையை! அதையேதான் அவர்களும் பிற்காலத்தில் விரும்புவார்கள். தான்மட்டும் தனியாக எந்த தொந்தரவுமில்லாமல் இருக்கவேண்டுமென்று, அதனால்தான் இன்று முதியோர்கள் இல்லம் களைகட்டிநிற்கிறது.
அவன் படித்து அவன் வாழ்க்கையை பார்த்துக்கொண்டால் போதும். என்ற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடாதீகள்.
அதையும் அவர்களெதிரிலேயே சொல்லாதீகள்.


நீ படித்து பெரியாளாகி. உன்னை நாங்கள்பார்த்துக்கொண்டதுபோல். எங்களையும் நீ பார்த்துக்கொள்ளவேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நமக்கென்று குடும்பமிருக்கு, அதுவும் நம்மை நம்பியிருக்கு, என்று மனஉறுதியோடு படிக்கவும். அதனால் பின்பு நல்ல நிலைக்கும் வரமுடியும்.நம்மையும் வைத்து காக்கமுடியும். நீங்கள் நினைக்கலாம் அது நம்கடமையல்லவா அதற்கு கைமாறு எதிர்ப்பார்கலாமான்னு. இது கைமாறல்ல. அவர்களுக்கும் கடமையிருக்கு என்பதை உணர்த்துவதேயாகும்.




எதுவென்றபோதும் அனைவரும் அமர்ந்து கலந்து ஆலோசியுங்கள். முதலில் குழந்தைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் போக்கில மாறுதல்கள் தெரியும் பட்சத்தில். கடிவாளத்தைப்போடுங்கள். நீங்கள் போடும் கடிவாளத்தை மிக கவனமாக போடுங்கள். அது அவர்களின் வாழ்க்கையென்னும் குரல்வளை நெறித்துவிடாதவாறும். அல்லது இவ்வாழ்க்கையிலிருந்தே அறுத்துக்கொண்டு ஓடிவிடாதாவாறும் இருக்கவேண்டும்.


உங்களின் எதிர்காலம் அவர்களின் எதிர்காலம் எல்லாமே நீங்கள் எடுக்கும் முடிவிலதான் இருக்கிறது. எடுக்கும் முடிவை நீங்கள் தவறாக எடுத்துவிட்டு கடைசியில் அவர்களை குற்றம் சொல்வதில் எவ்விதத்திலும் நியாயமேயில்லை! ஆகவே பெற்றோர்களே! உங்களின் தேர்வுகள். மிக தெளிவானதாகவும். அது. உங்கள் வம்சத்தையும் உங்களையும் பாதிக்காதவாறு தேர்வுசெய்யுங்கள் அதாவது.படிப்பைதந்துவிட்டு வாழ்க்கையை தொலைக்க வைத்துவிடாதீர்கள். அவர்களின் எதிர்காலம் என்பது அவர்களுடையை வாழ்க்கையையும் சேர்த்துதான்.


வாழ்க்கைக்கு கல்வி மிக மிக அவசியம்
அக்கல்வியை நெறியாக. முறையாக.
அமைத்துகொடுத்தலும் அமைத்துக்கொள்ளுதலும்.
மிக மிக மிக அவசியம்..


டிஸ்கி//இதில் நான் எதுவும் தவறாக சொல்லியிருந்தாலும். மனம்படும்படியான வார்த்தைகளிலிருந்தாலும் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளுங்கள்.


நீலவானில் ..

படிப்பு வேண்டும் படிப்பு வேண்டும்

பள்ளிப்படிப்பு படிக்கவேண்டும்

புகழ் வந்து சேர்த்த போதும்
பெரும் வசதிவாய்ப்பு வந்தபோதும்
படிப்பறிவு இல்லையென்றால்
பத்தாம் பசலியாகக் கூடும்

பணக்காரனும் படிக்கவேண்டும்
பாமரனும் படிக்கவேண்டும்
பள்ளிப்படிப்பு முடித்த பின்னே
பட்டப்படிப்பு தொடரவேண்டும்
படு புத்திசாலியாக வேண்டும்

வீட்டைகாக்க படிப்பு வேண்டும்
நாட்டைக்காக்க படிப்பு வேண்டும்
படிப்பை மட்டும் படித்துவிட்டால்
பல சோதனைகளை வெல்லக்கூடும்
பெரும் சாதனைகள் வந்து சேரும்.

சில்லென்ற காற்றில் கூட
சிறு சலசலப்பின் சத்தம் கேட்கும்
நீ படித்துவிட்டு பட்டம் பெற்றால்
நீலவானில் -உன் கால்கள் நடக்கும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.


என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

முகமூடி

அன்பென்ற அருமருந்து
அகிலமெங்கும்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தும்
அதையள்ளி
அருந்த மறந்து

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுமினம்
பணக்காரனென்றால்
ஒருமுகம்
பாமரனென்றால்
ஒருமுகமென
பிரித்துப் பார்க்கும்


முகமூடி
மனிதகுலத்தையெண்ணி
மனத்துக்குள்
மிரள்கிறேன்
மனிதமிதுவோவென
மலைக்கிறேன்


தேடித் தேடிப்பார்க்கிறேன்
தெளிவான முகங்களையும்
தெளிவான மனங்களையும்
அதிலெது
தெளிவென்றுதான்
இன்றுவரை புரியவில்லை
சிலநேரம்
என்னையும் விளங்கவில்லை

அத்தனை
முகங்களுக்குள்ளும்
மனங்களுக்குள்ளும்

"அன்பும் உண்டு.
ஆணவமும் உண்டு.

"ஆதங்கமும் உண்டு
ஆன்மீகமும் உண்டு.

"ஆற்றாமையும் உண்டு
ஆளுமையும் உண்டு.

"அதிகாரமும் உண்டு
அனுசரணையும் உண்டு.

’ஆதலால்’

எந்த மனிதருக்குள்
எது இருந்தபோதிலும்
பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
இருதயத்தின் கூட்டுக்குள்
எள்ளளவும்
பிறருக்கின்னல்தராமல்

மனம் பொருந்திய அன்போடு
மாசில்லா நற்குணத்தோடு
மனிதகுலத்தோடு
முகமூடியணியாத
மனிதர்களாய்
வாழ்ந்திருப்போம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மனதார மனம்கொடு.

வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,

வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு,

வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!

உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?

பழமுதிர்
சோலையாகவேண்டிய
பாவையர்களின் நிலை
பாலைவனமாக மாறுமோ?

முதிர்க் கன்னிகளின்
காத்திருப்புக்கு
முடிவேயில்லையா?
முதுகெலும்பில்லாதவருக்கு
கல்யாணம் தேவையா?

கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்.

கல்யாணத்தின் கடமையினைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கணவரென்ற உறவுக்கு
கெளரவம் சேருங்கள்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


வெற்றிமாலை



தோல்விகள்கண்டு
கிடைக்கும் வெற்றி
சந்தனமாலை போன்றது
அதுகாயக் காய
சாந்தமான வாசம்
வீசிடும்


தோல்விகளின்
வடுக்களை
தொட்டு பார்த்தால்
மீண்டும் மீண்டும்
வெற்றிமாலை
தோளில்
வாங்கத்தூண்டும்


குறுக்கு வழியில்
சட்டெனக்
கிட்டும் வெற்றி
ரோஜா மாலைப்
போன்றது


அது
வாடிப் போனால்
வாசம்போய்
வனப்பும் உதிர்ந்து
எஞ்சி மிஞ்சுவது
நார் மட்டுமே


திறமை முழுவதும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
வெளியுலகைக் காண
துணிவற்றிருந்தால்
திறமை தேடிவருமா


வெற்றிக்கு வித்திடாமல்
தொட்டாச்
சுறுங்கியைப்போலே
தோல்விகளைக்கண்டு
துவண்டு கிடந்தால்
வெல்லமுடியுமா


தன்னம்பிக்கையென்னும்
துணிவைக்கொண்டு
தோல்விகளை
எதிர்த்துப்பார்


எதிரியாய் வந்த
தோல்விகள்கூட
உன் துணிவு கண்டு
துவண்டுபோய்
தூர ஓடிவிடும்


உன்வாசல்தேடி
வெற்றிமாலை
வந்து சேர்ந்திடும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பெண்ணே நீயும்





அடி ஞானப்பெண்ணே!

பெண்ணுக்கு
பெண்ணே எதிரி
இதைப் பார்க்கும்போது
கதறுது மனம்
பதறி

வயிற்றில்
சுமையில்லையென
வஞ்சிமனதில் வருத்தத்தை
சுமத்துவதா

வம்சம்
விருத்தியாகவில்லையென
வாழவந்தவளை
வதை செய்வதா

பெண்ணுக்கு
குழந்தையில்லையெனில்
 மலடி என்றபெயர்
ஆணுக்கு
குழந்தையில்லையெனில்
??????? பெயர்

மருமகளுக்கு
குழந்தையில்லையெனில்
மகனுக்கு மறுமணம்

மகனுக்கு
குழந்தையில்லையெனில்
அது அவள்
வாங்கிவந்த வரமா

பெண்ணுக்கு
பெண்ணே சமமாகாமல்
ஆணுக்கு பெண்
ஆகுமா சரி சமம்

கூடிக்கூடி
குடும்பம் நடத்தியும்
குதூகலமாய்
தாம்பத்தியம் நடத்தியும்
இறைவன்
கொடுக்க நினைத்தால்தான்
குழந்தை

எல்லாம்
புரிந்திருந்தும் புரியாமல்
நடப்பவர்களைக்கண்டு
புண்படுகிறது
மனது

பெண்களே பெண்களுக்கு
ஆதரவாய் இருந்தால்
பெண்ணுலகமே
பொன்னாய் மின்னிடும்

அதனோடு ஆணினமும்
சேர்ந்திணைந்தால்
இப்பூலோகமே
பூத்துக்குலுங்கிடும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அரையடி நாக்கு


அரையடி
ஆறடியை
வீழ்த்துகிறது

எலும்புகள்
இல்லையென்று
எதை
வேண்டுமென்றாலும்
பேசுகிறது

தன் நாவால்
பிறருக்குத் தரும்
துன்பங்கள்
தனக்கே புரிந்தும்

தடம் புரள்கிறது
பிறரை
தடுமாறவைக்கிறது

நாவிலிருந்து
நழுவி விழும்
சொல்லில்
நேர்மை தவறுகிறது

நாளொரு பேச்சி
நிமிடத்திற்கொரு
வார்த்தை –என
நன்மதிப்பை
இழந்து விடுகிறது

அரையடி நாவின்
பொய்களை நம்பி
அநியாயமாய் பலரை
அழியவைக்கிறது

நாவைக்கொண்டு
நம்பிக்கை துரோகம்
நாளும் செய்து
நன்மையை இழக்கிறது

அரையடி நாக்கே
அன்பாயிருக்க அழகாய்
பழகிக்கொள்
அனைவரின் மனதிலும்
ஆட்சி செய்திட
விழிப்பாய் இருந்துகொள்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

புண்ணியம் தேடு


மனிதா!!!

உன் மனநிலையை புரிந்துகொள்ளவே
முடியவில்லையே!
கடலின் ஆழத்தையே அங்குளம்
அங்குளமாக அளந்துவிடும் மனிதனுக்கு
மனிதனின் மனதை
மனிதனே அறியமுடியவில்லையே!

மனிதா நீ,,,,

சுயநலமாய் நடக்கிறாய்
சுயநலத்துடன் வாழ்கிறாய்
உன் தேவைகளுக்காக
அடுத்தவர்களை பயன்படுத்தும் நீ,,

அவர்களின் தேவையென்னும்போது
கண்டும் காணாமலும் போகிறாய்
மனிதப்பிறப்பே மகத்துவமிக்கது
அதை சுயநலமென்னும் சேற்றைப்பூசி
மாசுபடுத்துவதா?

சுயநலத்துடன் வாழ்வது உனக்கு சுகம்
கொடுப்பதாக தோன்றும் அதுவே
உனெக்கென்றுவரும்போது
சுமையிலும் சுமையாக மாறும்.

மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
புண்ணியம் செய்து பலனைபெறு
புனித மனிதனாய் பூமியில் வாழு.......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அடிப்பெண்ணே


சித்திரைப்பெண்ணே, உன்சினத்தால் வாழ்வை சீரழித்துவிடாதே

வைகாசி பெண்ணே உன்வரம்புமீறிய வார்த்தையால் வாழ்வை
வதைத்துக்கொள்ளாதே.


ஆணிபெண்ணே, உன்ஆதாரமில்லாத ஆத்திரத்தால் வாழ்வை அழித்துவிடாதே.

ஆடிப்பெண்ணே, உன்அளவுக்குமீறிய ஆட்டத்தால் வாழ்வை அஸ்தமனம்மில்லாமல் ஆக்கிக்கொள்ளாதே.

ஆவணிப்பெண்ணே, உன்ஆணவத்தால் வாழ்வை அலங்கோலம் ஆக்கிவிடாதே.

புரட்டாசிப்பெண்ணே, உன்பொல்லாதாத குணத்தால் வாழ்வை புண்ணாக்கிக்கொள்ளாதே

ஐப்பசிப்பெண்ணே, உன்ஐயத்தைமீறி அதிகாரம் செய்யாதே

கார்த்திகைப்பெண்ணே, உன்கற்புக்கு கலங்கதை கற்பித்துவிடாதே

மார்கழிப்பெண்ணே, உன்மனம்போனபோக்கில் வாழ்வை நடத்திவிடாதே

தைப்பெண்ணே, உன்தவறினால் வாழ்க்கையை தவறவிட்டுவிடாதே

மாசிப்பெண்ணே, உன்மரபுகளை மறந்துவிட்டு வாழ்ந்துவிடாதே

பங்குனிப்பெண்ணே, உன்பண்பான குணத்தால் மற்றவைகளை தவிர்ந்து
பவித்ரமானதாய் உன்வாழ்வை பளிச்சென்று ஆக்கிக்கொள்.......

[டிஸ்கி] பெண் என்ற இடத்தில் ஆணென்றும் போட்டுக்கொள்ளலாம்.
எப்படி ஒரே கல்லில்.......]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அறம் செய மற


அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவண்ஜனை செய்
ஔவையாராய் ஆகாதே..

எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்

தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன்........





ஒருமுறை

 மனிதனுக்காக  படைக்கப்பட்ட
அனைத்தும் ”ரீயூஸ்”
மனிதன் மட்டும் ”ஒன்யூஸ்”

[இது சும்மா ஒரு ஷைடு பிட்]



அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அன்னையே அமுதம் தா


அவசர உலகமென்றபோதும்
அன்னை என்றென்றும் அன்னையே!

அழகு குறைந்து விடும் என்று
அழுகிற குழந்தைக்கு அமுதூட்ட
மறுக்கலாமா

ஆபீஸ்போகும் அவசரமானாலும்
அன்னம் ஊட்டிவிட நேரமில்லாமல்
போகலாமா

பெற்றபிள்ளைகளிடம் மனம்விட்டு பேச
பெற்றவளுக்கு நேரமில்லை
பணப்பிடியில் சிக்கிக்கொண்டு
பாசத்தை ஒதுக்கி   பறந்து திரிகிறாள்

பணம்வந்து சேர்ந்தபின்
பந்தபாசம் வந்து கிட்டுமா
தள்ளி தள்ளிபோனப்பின்
சேயின் மனம் ஒட்டுமா

அவசர உலகில் எல்லாம் அத்தியாவசியம்
ஆனால்
அதைவிட பிள்ளைகளின் பாசம் முக்கியம்

மெழுகாய் உருகியபோதும்
சற்றுசாந்தாமாய் பிஞ்சுமனங்களையும்
நுகர்ந்து பாருங்கள்

அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்
அவர்கள்சொல்வதையும் காதுகொடுத்துகேளுங்கள்
அவர்களுடன் ஒன்றிவிளையாடுங்கள்

சேர்ந்து உண்ணுங்கள்
அணைத்து உறங்குங்கள்
சிரித்து மகிழுங்கள் சிறப்பாய் வாழுங்கள்............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

உறக்கம்


நீ உறங்குவதற்கு முன்
உன் ஒவ்வொரு செயல்களையும்
நினைத்துப்பார்

தவறுகள் செய்திருந்தால்
இனி அதைப்போல் முடிந்தவரை
செய்ய கூடாது என--முடிவெடுத்துக்கொள்.


நல்லது செய்திருந்தால்
இனிஇதேபோல் தொடர்ந்துசெய்யனும் என
தீர்மானப்படுத்திக்கொள்

நாளடைவில் நல்லதை மட்டுமே
செய்வதை நீயே உணர்வாய்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

சிரித்துப்பார்


சிரிப்பு என்பதின் அர்த்தமே சிறப்பு
சிரித்துப்பார் உன் சிந்தனைகள் சிறகடித்துப்பறக்கும்
சிரிக்கும்போது சிந்தும் கண்ணீரில்
சிதைந்துபோன மனம்கூட சுகம்காணும்

புன்னகை சிந்தியபடி சிரித்த முகமாய் இரு
பொல்லாதவர்கூட உன்முகம்கண்டு புன்னகை பூத்திடுவர்
ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா

சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும்
சிரிப்பதால் சிந்தைகூட சில நேரம் சிலிர்த்துக்கொள்ளும்
நம்மை  மிருக்கத்திடமிருந்து  மாற்றிய மனித மிச்சம்

எதுவுமே அளவுக்கு மீறிவிட்டால் ஆபத்து
சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
சிரித்து வாழ்வதிலிருந்து விலகு..............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வார்த்தையும் வாழ்க்கையும்




வார்த்தை மிக வலிமையானது
ஒரு வார்த்தைதானே என்று வீணடித்து விடாதே
அது உன் வாழ்க்கையாகவும் இருக்கலாம்

உதிர்க்கும் வார்த்தையை உயர்ந்ததாக உதிரப்பழகு
பிறரை உருக்குலைக்கும்படியாக செய்துவிடாதே

உன் வார்த்தையில் வலியும் உண்டு வாஞ்சையும் உண்டு
அதை நீ பயன்படுத்தும் முறையில், வாஞ்சையே மேன்மை

வார்த்தை அம்பு போன்றது அதை செலுத்தும்முறை
தெரியாவிட்டால் விட்டவனிடமே வந்து சேரும்

ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தைக் கொல்லும் என்பார்கள்


நம் வார்த்தை நம்மை வெல்ல வைக்காவிட்டாலும்
பிறரை கொல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

வார்த்தை நெருப்பைவிட மோசமானது தவறான
ஒரு சொல் சுற்றத்தையே சுட்டெறித்துவிடும்

நம்மிடம் வார்த்தை சுத்தமாக இருக்கவேண்டும்
வார்த்தைதவறியவன் தன்னிலிருந்து ஒருபடி கீழிறங்கிவிடுகிறான்

ஒரு வார்த்தைதானே என நினைத்தால்
அது நம் வாழ்க்கையையே மாற்றிவிடும்

ஒரு பொன்தானே தவறிவிட்டால் என்ன விடுவோமா?
அதைவிட பலமடங்கு மேன்மையானது வார்த்தை

வாயிலிருந்து வழுக்கிவிழும் வார்த்தை
வாளைவிடக் கூர்மையானது

வார்த்தைகளை வசப்படுத்த தவறியன்
வாழ்க்கையை வழுவிலக்கச்செய்கிறான்

வார்த்தைக்குள்தான் வாழ்க்கை இருக்கிறது
ஆதலால்
வார்த்தைகளை உதிர்ப்பதற்கு முன்னால்

ஒருமுறைக்கு பலமுறை யோசி
வாழ்க்கை வாழ்வது ஈசி..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

ஆண்மகனே!


வாழ்வென்னும் வசந்தத்தை நீ
வசப்படுத்திக்கொள்ள வாழ்விடமே
வர"தட்சணை" கேட்ப்பது வேதனையாய் இருக்கிறது

சுகமாய் வாழவருபவள்
உன்சோகங்களையும் உன்சுமைகளையும்
உன்வம்சத்தின் வலிகளையும் சுமப்பதற்கு
கன்னியாய் வருபவள் கைகூலி தரவேண்டுமா?

கெளரவத்திற்காக திருமணமா?
கொடுக்கல் வாங்களில்தான்
இருமனங்கள் இணையனுமா?

அற்புதமான வாழ்க்கைக்கு வரதட்சணைவேண்டுமா?
ஆனந்தமகிழ்ச்சிக்கு ஆண்மகனைஅடகுவைக்கவேண்டுமா?
இதயங்களை இணைப்பதற்கு
இலவச இணைப்புகள் தரவேண்டுமா?

ஆண்மகன் என்பவன் அன்பிலும்அனைத்திலும்
பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கப்பிறந்தவன்
அடுத்தவரிடம் கையேந்தி வாங்கப்பிறந்தவனல்ல!

   ஆணினமே நீ!!

நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை
அதுவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை
அன்போடு கொடுத்து மங்கையை மனைவியாக்கு
மனநிறைவோடு வாழ்க்கையை சிறப்பாக்கு......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

காணாமல்போனது


கார்மேகங்கள் என கருப்பாய் கறுங்கூந்தல்
முட்டுக்கால்களை தொட்டது அன்று
கழுத்துக்கீழ் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது
நாகரீகத்தின்  கத்தரிக்கோலுக்கு இரையாகி இன்று

இவர்கள் காசுகொடுத்து கத்தறிக்கிறார்கள் மாடலுக்கு
அதுகூடை கூடையாய் விலைபோகிறது வெளிநாட்டிற்கு

பளபளக்கும் பட்டும் தளைய
தளையப்பின்னலும்தான் தமிழ்நாட்டின் திருஉருவம்
பாப்கட்டும் பேண்ட்சர்ட்டும் வெளிநாட்டவரின் மறுஉருவம்

ஆண்கள் அனைத்திலும் முழுமை என்று -
தற்போதுமுடியும் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்-ஆனால்
பெண்களின் ஆடை குறைவதுபோலவே
குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்


நாகரீகம்  மேலோங்கி கறுத்த கூந்தலெல்லாம்
வெளுத்தும் பழுத்தும் பல நிறங்களாகி விட்டது
அடிபெண்ணே அந்திவானம் சிவக்கலாம்
ஆனால் உன்கூந்தல் கறுத்தால்தான் அழகு

உன் அழகிய கூந்தல் அலை அலையாய்
தவழ்ந்து மிதப்பதில்தான் அழகு
அழகுமேனிக்கு  சிகைஅலங்காரம்
செய்வதுதவறில்லை அழகே -அதற்காக
சிகையையே அலங்கோலம் செய்துவிடாதே பெண்ணே..




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது