நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிறைவேறா ஆசை!.


மூடிய விழிகளுக்குள்
மழையில் நனையாதிருக்க
முந்தானைக் குடைப்பிடித்தாள்
அன்னை
நனையாத போதும்
விழிகள் வடித்த
கண்ணீரில் நனைந்தது
அனாதை தேகம்
கனவில் தோன்றிய
காட்சிகள்
கண்திறந்து பார்க்கையில்
காணாது போகவே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.

18 கருத்துகள்:

  1. //மழையில் நனையாதிறுக்க//

    இது '' நனையாதிருக்க '' என்று வந்திருக்க வேண்டும். நல்ல பொருள் உள்ள கவிதை .... ஹைக்கூ வாடை கொஞ்சம் இருக்கு ...........

    பதிலளிநீக்கு
  2. பாட்டு ரசிகன் கூறியது...

    ம்.. சூப்பர்..//

    மிக்க நன்றி பாட்டு ரசிகன்..

    பதிலளிநீக்கு
  3. // இக்பால் செல்வன் கூறியது...

    //மழையில் நனையாதிறுக்க//

    இது '' நனையாதிருக்க '' என்று வந்திருக்க வேண்டும். நல்ல பொருள் உள்ள கவிதை .... ஹைக்கூ வாடை கொஞ்சம் இருக்கு .........//

    வாங்க இக்பால் செல்வன். தங்கள் வருகைக்கும் பிழையை சுட்டிக்காடியமைக்கும். ஹைக்கூ வாடையாய் நுகர்ந்தமைக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  4. முந்தானைக் குடைப்பிடித்தாள்
    அன்னை//

    முந்தானையினைக் குடையாக உருவகித்து, பாசத்தின் பிடிப்பினையும், அன்னையின் அன்பினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. சகோதரி, அனாதைத் தேகத்தின் நிறை வேறாத ஆசைகளை மனதைத் தொடும் வகையில் கவியாய்க் கோர்த்திருக்கிறீர்கள்.

    //

    கண்ணீரில் நனைந்தது
    அனாதை தேகம்
    கனவில் தோன்றிய
    காட்சிகள்
    கண்திறந்து பார்க்கையில்
    காணாது போகவே..//

    கவிதையில் உணர்வுள்ள உயிர்ப் பூட்டும் வரிகளாக இவ் வரிகளைக் குறிப்பிடலாம்.

    நிறை வேறாத ஆசை, கனவுகளினூடே உலகத்தினைத் தரிசிக்க விரும்பும் ஓர் ஜீவனின் நிறை வேறாத உணர்வுகளின் வெளிப்பாடாய் விளங்குகிறது.

    பதிலளிநீக்கு
  6. மூடிய விழிக்குள் வந்த கனவு நனவாகட்டும்.

    பதிலளிநீக்கு
  7. அனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்காலிக சந்தோசத்தையும் வெட்டிச்சென்றுவிட்டதே!
    நிஜமும், கணவும் எனக்கு ஒன்றே!
    ------------------------------
    சகோதரி இதை நீண்டுவிட்ட ஹைக்கூன்னு நானும் சொல்கிறேன்.வாழ்துக்கள்.(எப்படித்தான் யோசிக்கிறீங்களோ)

    பதிலளிநீக்கு
  8. நிரூபன் கூறியது...

    முந்தானைக் குடைப்பிடித்தாள்
    அன்னை//

    முந்தானையினைக் குடையாக உருவகித்து, பாசத்தின் பிடிப்பினையும், அன்னையின் அன்பினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

    தன் தாயிடம் ஒருகுழைந்தை எதிர்ப்பார்க்கும் மிகப்பிடித்த விசயம் முந்தானைதானே நீரூபன் . அதான் அதனை உணர்ந்து இதனை எழுதினேன் மிக்க நன்றி நிரூபன்..

    பதிலளிநீக்கு
  9. ////கண்ணீரில் நனைந்தது
    அனாதை தேகம்////

    சில வரியானாலும் சில்லென்று இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  10. // நிரூபன் கூறியது...

    சகோதரி, அனாதைத் தேகத்தின் நிறை வேறாத ஆசைகளை மனதைத் தொடும் வகையில் கவியாய்க் கோர்த்திருக்கிறீர்கள்.

    //

    கண்ணீரில் நனைந்தது
    அனாதை தேகம்
    கனவில் தோன்றிய
    காட்சிகள்
    கண்திறந்து பார்க்கையில்
    காணாது போகவே..//

    கவிதையில் உணர்வுள்ள உயிர்ப் பூட்டும் வரிகளாக இவ் வரிகளைக் குறிப்பிடலாம்.

    நிறை வேறாத ஆசை, கனவுகளினூடே உலகத்தினைத் தரிசிக்க விரும்பும் ஓர் ஜீவனின் நிறை வேறாத உணர்வுகளின் வெளிப்பாடாய் விளங்குகிறது.//

    கண்கள் காணு காட்சிகள் மெய்யாகிவிடாதா என ஏக்கத்தோடு ஏங்கும் பிஞ்சுக்களை நினைத்தாலே நெஞ்சம் கனமாகும்.

    தாங்களின் உணர்வார்ந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி நிரூபன்..

    பதிலளிநீக்கு
  11. // இராஜராஜேஸ்வரி கூறியது...

    மூடிய விழிக்குள் வந்த கனவு நனவாகட்டும்.//

    தங்களின் வாக்கு அப்படியே பலிக்கட்டும்.. இராஜராஜேஸ்வரி அக்கா.
    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  12. // அமைதிச்சாரல் கூறியது...

    கவிதை நல்லாருக்கு மலிக்கா..//

    மிக்கநன்றி அமைதிச்சாரல்..

    பதிலளிநீக்கு
  13. crown கூறியது...

    அனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்காலிக சந்தோசத்தையும் வெட்டிச்சென்றுவிட்டதே!
    நிஜமும், கணவும் எனக்கு ஒன்றே!
    ------------------------------
    சகோதரி இதை நீண்டுவிட்ட ஹைக்கூன்னு நானும் சொல்கிறேன்.வாழ்துக்கள்.(எப்படித்தான் யோசிக்கிறீங்களோ)//

    அப்படியா சகோ நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே அமையும்..

    அப்புறம் உங்களைவிடவா சகோ நான் யோசிக்கிறேன்.
    எல்லாம் இறையருள்தான்..

    மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  14. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி! சில வரிகளில் பல காட்சிகள் தோன்றும் வண்ணம் உங்க கவிதை அருமை!

    //கனவில் தோன்றிய
    காட்சிகள்
    கண்திறந்து பார்க்கையில்
    காணாது போகவே..//

    வளர்ந்து ஆளான பிறகே பெற்றோர் இருவரையும் இழந்தாலும்கூட, இந்த வரிகளில் கூறியுள்ள ஏக்கம்தான் அடிக்கடி நடக்கிறது :(( குழந்தைகள் மனம் என்ன பாடுபடுமோ..!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது