நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுயநலப் பார்வையில்..



ல்லவர்கள் போர்வையில்
தீயவர்களின் ஆட்டம்
நல்லவைகளைக் கூட
கெட்டவைகளாக்கும்

சுயநலத்தின் பார்வையில்
வசதியுள்ளோரின் நட்பு
தூய்மையின் சின்னம்
வசதியற்றோரின் நட்பு
அசிங்கத்தின் அங்கம்
தாயிமைக்கு ஈடாகும் நட்பையும்
தரம் பிரித்து தவறாக்கிப் பேசும்

துன்பப்படும்போது என்னெவென்று
கேட்காத உறவுகள்
தோள்கொடுப்போரையும் சேர்த்து
தூற்றிப் பேசும்போது
உள்ளம் உருத்தாத சுயநலவா[வியா]திகள்

கெட்டவர்களெல்லாம்
நல்லவர்களாகிறார்கள்
இது நாகரிக காலத்தின் சாபம்
நல்லவர்கள்கூட
கெட்டவர்களாக்கப் படுகிறார்கள்
இதுதான் நல்லவர்களுக்கு
கிடைக்கப்படும் லாபம்

டைத்தவனுக்கு பயந்தவர்
கைவிடப்படுவதில்லை
படைப்பினங்களுக்கு பயப்படவேண்டிய
கட்டாயமில்லை

தூற்றியவர்கள் ஒருநாள்
போற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காலச்சக்கரம்.



மலைகளெல்லாம்
மலர்களைப்போல் உதிர்ந்து
நீரெல்லாம் நெருப்பாக வழிந்தோட!
வீசும் காற்று விசமாக!
பூக்களெல்லாம் புல்லுருவியாக!
நெஞ்சமெங்கும் வஞ்கமாகி
புன்னகையெல்லாம் போர்க்களமாக!

இப்படியான காலம்
இதோ! இதோ! கண்ணேதிரே
கலக்கத்தை ஏற்படுத்தி
காலச்சக்கரத்தை
வேகமாய் சுழற்றியபடி
நம் கண்முன்னே!

அப்புறம் பார்ப்போமென்று சொல்லி
அந்நொடி மறையும் அழிவும்
எண்ணி முடிக்கும் நொடிக்குள்
எல்லாம் நடந்துமுடியும்.

வாழும்காலம் எங்கே!
வறழும் காலம் எங்கே!
விதிவிட்ட வழியென்று
விரக்திகொள்ளும்.

சக்கரம் சுழவதுபோல்
சுழண்டு ஓடும் காலம்
சல்லடையில் மாட்டிக்கொண்டு
சின்னாபின்னாமாகும்.

யாரும் எதிர்பாரா வேளையில்
யுகங்களெல்லாம் நிமிடங்களாகி
பூகம்பப்பிடியில் உயிர்கள் உறைந்து
பூமிக்கடியில் புதையும்.

சற்றும் நினைத்திறா பொழுதில்
சலாரென எழும் அலைகள்
சுனாமியென்ற பெயரில் உடல்களை
சுக்குநூறாக்கி கிடத்தும்.

வழியும் கண்ணீரைத் துடைக்க
விரல்கள் வருமென்றிருந்தால்
வெள்ளம் வற்றாது
விழியில் நீர் பெருக்கெடுக்கும்.

காலச்சக்கரம் சுழல்கிறது
காலங்கள் வேகமாய் கரைகிறது
அனாச்சாரங்கள் அத்துமீறி
ஆழ்கடலையும் அதிர வைக்கிறது

விரைந்தோடும் காலச்சக்கரத்தோடு
வாழ்க்கையை ஓட்டத் தெரியாமல்
மனிதயினம்!
திக்கற்று தவிக்கிறது
தஞ்சம்புக இடம் தேடித் துடிக்கிறது..

இக்கவிதை அமீரக தமிழ்தேர் மாத இதழ் காலச்சக்கரம் எனும் தலைபிற்காக எழுதியது. இதை அனுப்பியதும் திரு காவிரிமைந்தன் அவர்கள். உடன் அனுப்பிய கருத்துக்கள் கீழே உள்ளவைகள்..

காலச்சக்கரத்தின் பதிவுகள் ... என்னவென்று
கவிதைச்சரம் தொடுத்து நீரும் தந்தீர்!
ஆழிப்பேரலையின் அட்டகாசத்தால்
அடங்கிப்போகுதே  மானுட இனமும்தான்!
நீரினில் இப்படி உலகின் பாகங்கள்...
மூழ்கிப் போவது  தொடர்கதையாவது மாறாதா?
நடப்பைக்கூட நம்கவிதையில் பதிவது
எழுத்துப்பணியை ஏற்றவர் செயலன்றோ?
அதையும் முறையாய் கவிதையில்தந்த
திறத்தையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்!
அன்புடன்,
காவிரிமைந்தன்.
மிக்க நன்றி சகோதரர் காவிரிமைந்தன் அவர்களே..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இன்றுமட்டுமல்ல என்றும்..

உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும். [அம்மாஸ்தானத்தை அடையச்செய்த அப்பாக்களுக்கும்]என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..

த்துமாதம் சுமந்து
பட்டபாடெல்லாம்
பசுமரத்து ஆணியாய் நெஞ்சில்
பதிந்திருந்தபோதிலும்

பெற்றதாயின் துன்பதை
பகிர்ந்துகொள்ள யியலாப் பிள்ளைகளாய்
தான் பெற்ற பிள்ளைக்காக
தேசம்கடந்து போகும் நிலை!

பெற்றதாயின் பாதத்தில்
சொர்க்கமுண்டு என்றபோதிலும்
பாழும் இனிப்பு நோயால்
பாதமிரண்டும் பற்றி எரிந்து
அவதிப்படும் வேளையில்
பக்கத்திலிருந்து
பார்க்க முடிவதில்லையே!
பாவிமக்களால்

லதுயரம் பலசிரமம்
பலதிசையில் கண்டு
பேணிவளர்த்தாள் அன்று
பிணிகொண்டு கிடக்கையிலே
பார்க்க கேட்க ஆளில்லாது
பரிதவிக்கும் நிலையானதே! இன்று

ன்னைமடியில்
ஆழ்ந்துறங்கிய அன்னங்கள்
அக்கரைக்குச் சென்று
அல்லல்பட்டு அவதிப்பட்டு
அயராது வேலைசெய்தபோதிலும்

ன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அல்லும் பகலும் அனுதினமும்
அன்னையவளை சேயினுள்ளம்
ஆத்மார்த்தமாக  நேசிக்குமென்பதையும்
அடி பிசகாமல் உணரும்
அன்னையவளின் நெஞ்சம்..

டிஸ்கி// புத்தக மதிப்புரையில் என் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை”  தினத்தந்தியில் வந்துள்ளது..மணிமேகலை பிரசுரத்தாருக்கும்.தினதந்திக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது